tamilnadu

img

குறைந்தபட்சம் ஓய்வூதியம் கோரி சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

குறைந்தபட்சம் ஓய்வூதியம் கோரி சத்துணவு,  அங்கன்வாடி ஓய்வூதியர்கள் ஆர்ப்பாட்டம்

புதுக்கோட்டை, ஜுன் 10-  குறைந்தபட்ச ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுக்கோட்டையில் தமிழ்நாடு அனைத்து சத்துணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் துணைத் தலைவர் எம். இந்திராணி தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் ஆர்.ரெங்கசாமி, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தின் மாநிலத் துணைத் தலைவர் கு.சக்தி, மாவட்டச் செயலாளர் க. அய்யாத்துரை, மாவட்டத் துணைத் தலைவர் சி. மணிமுத்து, மாவட்டப் பொருளாளர் ஏ. செல்வம் உள்ளிட்டோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் தேர்தல் வாக்குறுதிப்படி அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு ரூ. 7,850 குறைந்தபட்ச ஓய்வூதியம் வழங்க வேண்டும். விலைவாசி உயர்வுக்கேற்ப மற்ற ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படுவதைப் போல அகவிலைப்படி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.