சென்னை, அக்.22- தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஆரோக்கிய நடை சாலைத்திட்டம் (ஹெல்த் வாக் சாலை திட்டம்) தொடங்கப்பட உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார். சென்னை காவேரி மருத்துவ மனை சார்பில் நடைபெற்ற மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் மா. சுப்பிர மணியன், நாங்கள் ஜப்பான் நாட்டிற்கு சுற்றுப்பயணம் செய்த போது அங்கு ஹெல்த் வாக் என்ற சாலை அமைக்கப்பட்டி ருந்தது. இது என்ன என்று அவர்க ளிடம் கேட்ட போது, மக்களிடையே நடைபயிற்சி பழக்கத்தை ஏற்படுத்த இந்த சாலை அமைக்கப் பட்டுள்ளதாக கூறினார்கள். மேலும் இந்த சாலைகள் 8 கி.மீ தூரத்திற்கு மட்டும் அமைக்கப் பட்டிருந்தது. இதுகுறித்து கேட்ட போது, 8 கி.மீ என்பது 10 ஆயிரம் அடிகள் ஆகும். ஒருவர் தினமும் 10 ஆயிரம் அடிகள் நடந்தால் உடல் ஆரோக்கியமாக இருக்கும். எனவே 8 கி.மீ தூரத்திற்கு அமைத் துள்ளதாக அவர்கள் கூறினார்கள். தமிழ்நாட்டிற்கு திரும்பியதும் இந்த அருமையான திட்டம் குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் தெரிவித்தேன். உடனடியாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டு 38 மாவட்டங்களில் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக அனைத்து மாவட்டங் களிலும் சாலைகள் தேர்ந்தெடுக் கப்பட்டு ஹெல்த் வாக்சாலை அமைக்கப்பட்டுள்ளது. சென்னை யில் முத்துலட்சுமி ரெட்டி பார்க்-ல் இருந்து பெசன்ட் நகர் பீச் வழியாக அன்னை வேளாங் கன்னி சர்ச் வழியாக மீண்டும் முத்து லட்சுமி ரெட்டி பார்க் வரை சாலை அமைக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4 ஆம் தேதி இந்த திட்டத்தை தொடங்கி வைக்கிறார். அன்று காலை 6 மணிக்கு தொடங்கி வைத்து அவர் நடை பயிற்சி மேற்கொள்ளவுள்ளார். விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாநகர மேயர் பிரியா, மக்களவை உறுப்பினர் தயாநிதிமாறன், காவேரி மருத்துவமனையின் புற்று நோய் சிகிச்சை நிபுணர் வைத்தீஸ்வ ரன், கண்காணிப்பாளர் டாக்டர் மகேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். முன்னதாக 200 பெண் கள் மோட்டார் சைக்கிள் பயணத்தை அமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்.