அவிநாசி, ஏப்.18- அரசு போக்குவரத்துக் கழகங்களில் நடைபெறும் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து, வேலை நிறுத்த போராட்டத்திற்கு தயாராகின்றனர். திருப்பூர், திருமுருகன்பூண்டியில், சிஐடியு அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் கூட்டம் தனியார் திருமண மண்டபத்தில் திங்களன்று துவங்கியது. இதில், சங்கத்தின் சம்மேளன பொதுச் செயலாளர் கே. ஆறுமுக நயினார், பொருளாளர் சசி குமார், துணைப் பொதுச் செயலாளர் தயானந்தன் உள்ளிட்ட சம்மேள னக்குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். முன்னதாக, சிஐடியு மாநிலத் தலை வரும், அரசுபோக்குவரத்து ஊழியர் சங்கத்தின் சம்மேளன தலைவருமான அ.சவுந்தரராசன் செய்தியாளர்களிடம் பேசுகையில், போக்குவரத்து கழ கங்களில் மோசமான மாற்றங்கள் ஏற் பட்டிருக்கின்றன. அரசு ஏற்கனவே அறி வித்த கொள்கைகளுக்கு மாறாக முடிவு கள் எடுக்கின்றது. இது தொழிலாளர்களி டத்தில் கடுமையான வருத்தத்தை ஏற் படுத்தி உள்ளது. இந்த பிரச்சனைகள் மீது விவாதம் நடத்தப்பட்டதில், வேலைநிறுத்தப் போராட்டம் மேற் கொள்ள முடிவு எடுக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 18 ஆம் தேதி வேலை நிறுத்தப் போராட்டத்திற்கான நோட்டீஸ்களை வழங்கி, மே மாதம் 3 ஆம் தேதி அல் லது மற்றொரு தேதியில் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட முடிவு எடுக்கப் பட்டுள்ளது. அரசு மற்றும் தொழிலாளர் துறை எங்கள் கோரிக்கையின் மீதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டால் மட்டுமே வேலை நிறுத்தத்தை தவிர்க்கப்படும்.
இந்தியாவில் மிகச் சிறப்பாக செயல்படும் நமது போக்குவரத்துக் கழகத்தில், ஒன்னேகால் லட்சம் தொழி லாளர்கள் பணியாற்றுகிறார்கள். ஒவ் வொரு நாளும் சுமார் 2 கோடி மக்கள் பயணிக்கிறார்கள். இது வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. போக்கு வரத்துக் கழகத்தின் சிறப்பான செயல் பாடு காரணமாக தமிழகத்தினுடைய ஜிடிபி தமிழகத்தினுடைய சராசரி வரு மானம் உயர்ந்துள்ளது. மலைப்பகுதி, கடலோரம் என அனைத்துப் பகுதிகளி லும் பேருந்து சேவையை வழங்கி வரு கிறோம். இதனால், தமிழகத்தின் மாண வர்களின் கல்வி விகிதம், குறிப்பாக பெண் குழந்தைகளின் கல்வி விகிதம், கிராமத்து குழந்தைகளின் கல்வி விகி தம் உயர்ந்துள்ளது. இத்தகைய புரட்சி கரமான மாற்றத்தை அரசு போக்கு வரத்துக் கழகம் உருவாக்கியுள்ளது. அப்படிப்பட்ட போக்குவரத்து கழ கத்திற்கு அரசாங்கம் முன்னுரிமை அளித்து நிதி ஒதுக்கீடு செய்து, மக்க ளுக்கான சமூகப் பணியை ஏற்று ஈடு கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண் டும். அதற்கு பதிலாக தொழிலாளர் களின் தலையில் சுமையை ஏற்ற அரசு முயற்சிக்கிறது. தொழிலாளர்களின் பணத்தை ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் அரசு செலவு செய்துள்ளது. பிஎப், எல்ஐசி, சொசைட்டி போன்ற தொழிலாளர்களின் எல்லா பணத்தை யும் செலவு செய்துள்ளனர். ஓய்வூ தியப் பணத்தை ஆண்டுக் கணக்கில் தாமதப்படுத்தி, வைத்துள்ளனர். 90 மாதங்களுக்கு மேலாக ஓய்வு பெற்ற ஊழியர் பஞ்சப்படி பணத்தை அப்ப டியே வைத்துள்ளனர். அதுவே, ஆயிரம் கோடியை தாண்ட உள்ளது. இப்படி பல்லாயிரம் கோடி ரூபாய் தொழிலா ளர்களுக்கு தர வேண்டிய, பணத்தை அரசாங்கம் செலவழித்துள்ளது. இதெல்லாம் தொழிலாளிகளுக்கு இழைக்கப்படுகிற அநீதி. இதற்கு மத்தியிலே போக்குவரத்துக் கழகங்களில் 15 ஆயிரம் காலி பணி யிடங்கள் உள்ளன. இதனால் மக்க ளுக்கான சேவை பாதிக்கப்பட உள் ளது. இப்பொழுது சென்னையில் 900 பேருந்துகள் நிறுத்தப்பட்டுள்ளன. ஒரே காரணம் தொழிலாளர்கள் இல்லை என்பதுதான். இதேபோன்று நகரப் பகுதிகளில் பல பேருந்துகள் நிறுத்தப் பட்டுள்ளன.
அவுட்சோர்சிங் எனும் புதிய முறை
விரைவு போக்குவரத்துக் கழ கங்களில் 1424 காலிப் பணியிடங்கள் உள்ளன. காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும் என நாங்கள் கேட்கிறோம், ஆனால், அரசு 60 சதவிகி தம் அளவிற்கு 700 நபர்களை விரைவு போக்குவரத்துக் கழகங்களில் பணிக்கு எடுத்துவிட்டு, மீதமுள்ள அறநூறு பேரை (அவுட்சோர் சிங் )வெளி முக மையில் இருந்து எடுத்துக் கொள்கி றோம் என்கின்றனர். இதுவரை இல்லாத ஒரு புதிய முறை, தனியார் முதலாளிகள் பின் பற்றக்கூடிய மோசமான முறை. இதன் மூலமாக ஆட்களை எடுக்கிறோம் என்று டெண்டர் விட்டிருக்கிறார்கள். ஆகவே, இதை எந்த காரணத்தை கொண்டும் ஏற்க முடியாது. நிரந்தர பணியாக தொழிலாளர்களை பணிக்கு அமர்த்த வேண்டும். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது முதல் கோரிக்கை. வேலைக்கு எடுக்கக்கூடிய ஆட் களை அவர்களுக்கு கொடுக்கின்ற கூலி கூட சட்டப்படி ஆனது கிடையாது. ஏற்கனவே போட்டு இருக்கின்ற ஒப் பந்தத்தின்படி. ஒரு ஓட்டுநருக்கு, ஒரு நாள் சம்பளம் ரூ.930, இதை விட்டு விட்டா லும் சட்டத்தில் இருக்கிற குறைந்தபட்ச கூலி அதன் கணக்குப்படி ரூ.730 கொடுக்க வேண்டும். அதையும் கொடுக்காமல், ரூ.553 கொடுப்போம் என டெண்டரில் அறிவிக்கின்றார்கள். சட்டத்திற்கு விரோதமாகவும், நாங்கள் போட்டு இருக்கிற ஒப்பந்தத்திற்கு விரோதமாகவும் இது உள்ளது. பேருந்துகளை தனியாருக்கு என்று அறிவிப்பதை நாங்கள் எதிர்த்துக் கொண்டே இருக்கிறோம். அமைச்சர் தனியார்மயம் என்ற பேச்சுக்கு இட மில்லை என்று கூறுகிறார். ஆனால் நடக்கின்ற காரியம் அப்படி இல்லை.
அறிவித்த ரூ.1000 கோடியை உடன் வழங்க வேண்டும்
ஆகையால், காலிப் பணியிடங் களை உடனடியாக நிரப்ப வேண்டும், பேருந்துகள் முறையாக முழுமையாக இயங்க வேண்டும். மக்களுக்கு வசதி கள் கிடைக்க வேண்டும். ஊதியத்தை முறையாக கொடுக்க வேண்டும். நிலு வையில் உள்ள பணத்தையும் கொடுக்க வேண்டும். பட்ஜெட்டில் சில அறி விப்பை வெளியிட்டுள்ளனர். ஆயிரம் கோடி ரூபாய் போக்குவரத்துக்கு அறி வித்துள்ளனர். உடனடியாக அப் பணத்தை விடுவிக்க வேண்டும். அவுட் சோர்சிங் முறையை அனுமதிக்கக் கூடாது. இது எங்களுக்கான வேலை நிறுத்தமல்ல. மக்களுக்கான வேலை நிறுத்தம். இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தை அனைத்து தொழிற்சங் கங்களும் ஆதரிப்பார்கள் என்றார். மேலும், தொழிற்சாலை சட்டத்தில் 8 மணி நேர வேலை, மிகை நேர ஊதி யம் உள்ளது. 75 வருடங்களாக இந்த சட்டம் உள்ளது. அந்த சட்டத்தை தற் போது திருத்தம் செய்து மோசமா னதை முன்மொழிந்துள்ளது. இதனை நிறைவேற்றினால் வேலை நேரம் என்பதே போய்விடும். எதற்கு இந்த அர சாங்கம் இப்படி செய்கிறது என்பது தெரியவில்லை. இது போன்ற நட வடிக்கைகளை கைவிட வேண்டும் என்றார்.