சண்டிகர், மார்ச் 5- நாடு முழுவதும் பாலஸ்தீன ஒரு மைப்பாட்டு ஆதரவு இயக்கம் நடத் தப்படும் என்று அகில இந்திய சமா தான ஒருமைப்பாட்டு கழகத்தின் (AIPSO) அகில இந்திய மாநாடு அறி வித்துள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத் தின் மாண்புகளை உயர்த்திப் பிடிக்க வும் ஏகாதிபத்திய எதிர்ப்பு மற்றும் உலக சமாதானத்துக்கான இயக் கத்தை வலுப்படுத்துவதற்கும் ஆகிய உயரிய நோக்கங்களை முன் னிறுத்தி அகில இந்திய சமாதான ஒருமைப்பாட்டு கழகத்தின் (AIPSO) அகில இந்திய மாநாடு சண்டிகர் நக ரத்தில் மார்ச் 4, 5 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றன. மாநாட்டிற்கு நிலோத்பல் பாசு உள்ளிட்ட தலைமை குழுவினர் தலைமை வகித்தனர். பொதுச் செய லாளர் அருண்குமார் அரசியல் கொள்கை விளக்க அறிக்கையையும் பல்லப சென் குப்தா ஸ்தாபன அறிக் கையையும் சமர்ப்பித்தனர். கிரீஸ், கியூபா, வியட்நாம், இலங்கை, வங்க தேசம், நேபாளம் உட்பட பல்வேறு நாட்டில் உள்ள சமாதான ஒருமைப் பாட்டு இயக்கத்தின் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங் கினர். பாலஸ்தீன இயக்கத்தின் தலைவரான அக்யேல் என்பவருக்கு விசா வழங்கப்படவில்லை. ஆத லால் அவரால் மாநாட்டில் கலந்து கொள்ள முடியவில்லை. எனவே அவரது உரை காணொலியாக காட் டப்பட்டது. மாநாட்டில் 350 பிரதி நிதிகளும், பார்வையாளர்களும் கலந்து கொண்டனர்.
தமிழ்நாட்டின் சார்பாக மிருதுளா, மருத்துவர் சாந்தி ஆகியோர் விவா தத்தில் பங்கேற்றனர். மாநாட்டில் 133 பேரைக் கொண்ட பொதுக்குழு தேர்ந்தெடுக்கப்பட்டது. அருண் குமார், ஹர்சந்த் சிங் ஆகிய இரு வரும் பொதுச்செயலாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். பாலஸ்தீனர்களுக்கு குடியுரிமை யை அவர்களுடைய நாட்டிலேயே மறுக்கக்கூடிய இஸ்ரேலை கண் டித்தும், பாலஸ்தீன மக்களுடைய உரிமைகளுக்காக, ஒருமைப் பாட்டைத் தெரிவித்தும் உக்ரைன் போரை உடனடியாக நிறுத்த கோரி யும், கியூபாவுக்கு ஒருமைப்பாட்டை யும் ஆதரவையும் தெரிவித்து, அரசி யல் அமைப்புச் சட்டத்தின் மாண்பு களை பாதுகாப்பதற்குமான தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.பாலஸ்தீன மக்களின் குடியுரிமை யை மீட்டெடுப்போம் என்றும் பாலஸ்தீன ஒருமைப்பாட்டு ஆதரவு இயக்கத்தை நாடு முழுவதும் நடத்த வும் மாநாட்டில் முடிவு செய்யப் பட்டது. தமிழ்நாட்டிலிருந்து உதவித்தலை வராக ரவீந்திரநாத், செயலாளராக ஆறுமுகநயினார் மற்றும் டி.செந்தில் குமார், கே சி கோபி குமார், ஆர் ராஜேந்திரன், எஸ்.மிருதுளா, பி செந்தில்குமார், டாக்டர் சாந்தி, பாலச் சந்திரன், மணி மோகன் ஆகிய செயற்குழு உறுப்பினர்கள் உள்பட பத்து பேர் பொதுக்குழுவுக்கு தேர்ந் தெடுக்கப்பட்டனர்.