tamilnadu

img

50 லட்சம் பேர் முதல் தவணை தடுப்பூசி போடவில்லை: அமைச்சர் தகவல்

சென்னை,மார்ச் 26- தமிழ்நாட்டில் 18 வயதை  கடந்த நபர்களில் 92.10 விழுக்காட்டினர் முதல் தவணை தடுப்பூசியும், 75.50  விழுக்காட்டினருக்கு இரண்டாம் தவணை தடுப் பூசியும் செலுத்தப்பட் டுள்ளது என அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள் ளார். சென்னை மாநகராட்சி, ஆலந்தூர் மண்டல அலுவலகத்தில் நடைபெற்ற 26-வது கொரோனா மெகா  தடுப்பூசி சிறப்பு முகாமினை  அமைச்சர்கள் மா.சுப்பிர மணியன், தா.மோ.அன்பர சன் ஆகியோர் ஆய்வு செய்த னர். பின்னர் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியதா வது:- நாட்டில் மற்ற மாநிலங் களைக் காட்டிலும் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் தொடர்ந்து 26-வது வாரமாக தமிழ்நாட்டில் மட்டும் நடத்தப்பட்டு வரு கிறது. கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் மாநிலம்  முழுவதும் 50 ஆயிரத்துக் கும் மேற்பட்ட இடங்களில்  நடைபெற்றது. இதுவரை  நடைபெற்ற தடுப்பூசி முகாம்களில் 3,90,41,963 தடுப்பூசிகள் செலுத்தப்பட் டுள்ளது. தமிழகத்தில் சுமார் 50,61,287 நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்தா மல் உள்ளார்கள்.

1,34,97,690 நபர்கள் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டிய நாட்களை கடந்து  தடுப்பூசி செலுத்தாமல் உள்ளனர். இவர்களுக்கு அந்தந்த மாவட்ட நிர்வா கங்களின் சார்பில் சுகாதாரத் துறை அலுவலர்கள் மற்றும்  பிற சேவைத்துறை அலு வலர்களால் கணக்கெடுப்பு செய்யப்பட்டு குறுஞ்செய்தி வாயிலாகவும் தகவல் அனுப்பப்படுகிறது. 12 முதல் 14 வயதுடைய 21,21,000 சிறார்களுக்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம்  கடந்தவாரம் தொடங்கப் பட்டு 10,91,841 சிறார்க ளுக்கு தடுப்பூசி செலுத்தப் பட்டுள்ளது. 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்க ளில் 33,46,000 நபர்களுக்கும் தடுப்பூசி செலுத்த இலக்கு  நிர்ணயிக்கப் பட்டு இது வரை 28,58,680 நபர்களுக்கு முதல் தவணை தடுப்பூசி யும், 20,37,866 நபர்களுக்கு இரண்டாம் தவணை  தடுப்பூசியும் செலுத்தப் பட்டுள்ளது. தமிழகத்தில் 12,585 ஊராட்சிகளில் 3,240 ஊராட்சிகளிலும், 121 நக ராட்சிகளில் 27 நகராட்சி களிலும் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தப்பட் டுள்ளன. மேலும் 5 மாவட்டங் கள் 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியுள்ளன. 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய மாவட்டங்கள், நகராட்சிகள் மற்றும் ஊராட்சி களுக்கு முதலமைச்சர் கையொப்பமிட்ட பாராட்டுச் சான்றிதழ் மக்கள் நல் வாழ்வுத்துறையின் சார்பில் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினர். இந் நிகழ்ச்சியில் மக்கள்  நல்வாழ்த்துறை அரசு  மருத்துவம் முதன்மை செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.