tamilnadu

img

அரசு நிர்ணயிப்பதும் இல்லை; கட்டுப்படுத்துவதும் இல்லை

சு.வெங்கடேசன் எம்.பி., கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதில்

புதுதில்லி, ஜூலை 30-  விமானப்பயணக் கட்டணங்கள் அதிகரித்துள்ளது குறித்தும் இதில் ஒன்றிய அரசு தலையிட்டு எடுத்த நடவடிக்கை என்ன என்பது குறித்  தும் நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியிருந்தார். இதற்கு, விமானபயணக் கட்டணங்களை அரசு நிர்ணயிப்பதும் இல்லை; கட்டுப்  படுத்துவதும் இல்லை என்று ஒன் றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். இதன் மூலம் தனக்கு எந்த பொறுப்  பும் இல்லை என்று ஒன்றிய அரசு கைவிரித்துள்ளது.  இதுகுறித்து சு.வெங்கடேசன் எம்.பி. வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: மலிவான விமானப் பயணங்கள்  எல்லாம் உலகமய பொருளாதாரப் பாதையின் பயன் என்று ஆட்சியா ளர்கள் பேசிய காலம் உண்டு. இப் போது நிலைமை தலைகீழாக இருக்  கிறது.  இது குறித்த கேள்வி ஒன்றை நாடாளுமன்றத்தில் நான் எழுப்பி யிருந்தேன். 

கடந்த இரண்டு மாதங்களில் மட்டும் விமானக் கட்டணங்கள் 20 சத வீதம் உயர்ந்துள்ளது. ஓராண்டில் பிரபலமான தடங்களில் 50 சத வீதம் கட்டணங்கள் உயர்ந்துள்ளன. இதை அரசு கவனத்தில் கொண் டுள்ளதா? கட்டணங்களை கட்டுப் படுத்த அரசிடம் ஏதாவது அதிகாரம்  தக்க வைக்கப்பட்டுள்ளதா? அரசின் கைகளில் இருந்த ஒரே விமான நிறு வனமான ஏர் இந்தியா, டாடா குழு மத்திற்கு விற்கப்பட்டதால் அரசிடம்  இருந்த விலைக் கடிவாளம் கை நழுவிப் போய் விட்டதா? மலிவு விமா னப் பயணத்தை உறுதி செய்ய அரசின் தலையீடுகள் என்ன? என்ற  கேள்விகளை எழுப்பி இருந்தேன்.  உள் நாட்டு விமானப் போக்கு வரத்து இணை அமைச்சர் ஜெனரல்  (ஓய்வு) வி.கே.சிங் இதற்கு பதில் அளித்துள்ளார். 

விமானக் கட்டணங்களை அரசு  நிர்ணயிப்பதும் இல்லை. கட்டுப் படுத்துவதும் இல்லை. 1937 விமா னங்கள் சட்டம் பிரிவு 135 உட்பிரிவு  1 இன் படி ஒவ்வொரு விமான நிறு வனமும் செலவினம், சேவையின் தன்மை, நியாயமான லாபம், நடப்பில் உள்ள கட்டண அமைப்பு கள் ஆகியவற்றை கணக்கில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்க  வேண்டும். ஆகவே நியாயமான  கட்டணங்களை நிர்ணயிக்கிற சுதந்திரம் விமான நிறுவனங்க ளுக்கு பிரிவு 135 உட்பிரிவு 1 இன்படி  உண்டு. இருந்தாலும் அசாதாரண கோவிட் சூழலை கணக்கில் கொண்டு சட்டத்தின் பிரிவு 8 B யைப் பயன்  படுத்தி அரசாணை எண் 02.20/ 21.05.2020 மூலம் உச்ச பட்ச, கீழ் வரம்பு கட்டணங்கள் தற்காலிக மாக வரைமுறை செய்யப்பட்டன. இந்த விலை கட்டண அமைப்பு  காலத்திற்கேற்ப, விமான எரி பொருள் விலை உயர்வுகளையும் கணக்கில் கொண்டு, மாற்றங்க ளுக்கும் ஆளாகியது. 15 நாட்க ளுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் விலை உச்சவரம்பை இப்போதும் நிர்ணயித்து பயணிகளின் நலனை  பாதுகாக்கிறோம். ஏர் இந்தியா ஜனவரி 2022 இல் தான் விற்கப்பட் டது. ஆனால் விலை உச்சவரம்பு மே 2020 இல் இருந்து அமலில் உள்ளது.

2016 இல் இருந்து உடான் (UDAN) திட்டம் மூலம் அதிக போக்கு வரத்து இல்லாத பிராந்திய விமா னத்தளங்களின் இணைப்பை வலுப்  படுத்தி வருகிறோம் என்று அமைச்  சர் பதில் அளித்துள்ளார்.  அரசுக்கு கடிவாளம் கைகளில் இல்லை என்பதே இந்த பதிலின் சாரம். மலிவு விலை விமானப் பய ணங்கள் பொருளாதார சீர் திருத்தங்  களின் வெற்றி என்று தம்பட்டம் அடித்த அரசாங்கம், இரண்டு மாதங்  களில் 20 சதவீதம் உயர்வு, ஓராண்டில் 50 சதவீதம் உயர்வு ஏன் என்பதற்கு எந்த விளக்கத்தையும் தரவில்லை. இவ்வாறு அதில் தெரிவித் துள்ளார்.