tamilnadu

img

பேச்சுவார்த்தையில் முன்னேற்றமில்லை ஜன.3 மீண்டும் பேச்சுவார்த்தை

சென்னை, டிச. 27 - போக்குவரத்து கழக உயர் அதிகாரி கள் பங்கேற்காததால் பேச்சுவார்த்தை யில் முன்னேற்றமில்லை என்று சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் தெரி வித்துள்ளார். காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கழகங்களின் வரவுக்கும் செல வுக்குமான வித்தியாசத் தொகையை அரசு பட்ஜெட்டில் ஒதுக்கி வழங்க  வேண்டும், ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு  99 மாதங்களாக வழங்கப்படாமல் உள்ள  அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும், தேர்தல் வாக்குறுதிபடி புதிய  ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும், 15வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை யை தொடங்க வேண்டும், வாரிசு பணிநிய மனங்களை மேற்கொள்ள வேண்டும் ஆகிய 6 கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.19ந் தேதி மேலாண்மை இயக்குநர் களிடம் போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங் கள் மற்றும் ஓய்வுபெற்றோர் நலசங்கங் களின் கூட்டமைப்பு வழங்கியது. இதனையடுத்து புதனன்று (டிச.27) தொழிலாளர் நல தனி இணை ஆணையர் எல்.ரமேஷ் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் சிஐடியு உள்ளிட்ட 24 சங்கங்களின் தலைவர்கள், போக்குவரத்து கழகங்களின் அதிகாரிகள் பங்கேற்றனர். பேச்சுவார்த்தைக்கு பிறகு செய்தியாளர் களிடம் அ.சவுந்தரராசன் கூறியதாவது: அகவிலைப்படி உயர்த்தி வழங் காததால் 21ஆயிரம் ஓய்வூதியர்கள் உரிய ஓய்வூதியத்தை பெற முடிய வில்லை. நீதிமன்ற தீர்ப்புகளை கூட  செயல்படுத்த மறுக்கின்றனர். பல மாநி லங்களில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த தொடங்கிய பிறகு தமிழ்நாடு அரசு செயல்படுத்தாமல் இருப்பது சரியல்ல.  6 ஆயிரம் பேருந்துகள் ஒடாமல் இருப்பதற்கு காலி பணியிடம் நிரப்பாமல் இருப்பதுதான் காரணம். கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். 15 வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை இன்னும் தொடங்க வில்லை. அரசு உடனடியாக பேசவேண்டும். இன்றைய கூட்டத்தில் போக்கு வரத்து கழக மேலாண் இயக்குநர்கள் கலந்து கொள்ளவில்லை. முத்தரப்பு  பேச்சுவார்த்தையை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என தெரி கிறது. இதனால் பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் இல்லை.இதே நிலை நீடித் தால் ஜனவரி 4 க்கு பிறகு வேலை நிறுத்தம் செய்ய உறுதியாக இருக்கி றோம். வேலை நிறுத்தத்தை விளக்கி டிச.30, 31, ஜன.2 தேதிகளில் மாநிலம் முழு வதும் பிரச்சாரம் நடைபெறும். ஜன.4 தேதி அனைத்து மண்டல அலுவலகங் களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும். தொழிலாளர் இணை ஆணையர் அதிகாரிகளுக்கு சில அறிவுறுத்தல் செய்து இருக்கிறார். அடுத்த பேச்சு வார்த்தை ஜன.3ந் தேதி நடக்க உள்ளது. இந்த விவகாரத்தில் முதலமைச்சர் அழைத்து பேசினால் நல்லது. வேலை நிறுத்தம் பிரச்சனை தீர வாய்ப்பாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.