tamilnadu

நெய்வேலி மக்கள் போராட்டம்: துரைமுருகன் விளக்கம்

சென்னை, மார்ச் 22- சட்டப்பேரவையில் கேள்வி நேரத்திற்கு பிறகு நேரம் இல்லாத நேரத்தில், நெய்வேலி நிலக்கரிச் சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த மக்கள் நடத்திவரும் போராட்டம் குறித்து  புவனகிரி தொகுதி அதிமுக உறுப்பி னர் அருள்மொழித் தேவன், பண்ருட்டி வேல்முருகன் ஆகியோர் அரசின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.  அப்போது பேசிய உறுப்பி னர்கள்,”நெய்வேலி நிலக்கரி இரண்டாவது சுரங்கத்திற்கு நிலம் கொடுத்த புவனகிரி தொகுதி மக்க ளுக்கு இது வரையிலும் அந்த நிர்வாகம் அளித்த எந்த வாக்குறுதி யையும் நிறைவேற்றவில்லை. இந்நிலையில் மூன்றாவது சுரங்கத்திற்கு நிலம் எடுக்கும் பணியும் நடந்து வருகிறது இதனால் மக்கள் பெரும் அச்சத்தில் தினசரி போராட்டம் நடத்தி வருகின்றனர். நிலம் வழங்கிய குடும்பங்களில் ஒருவருக்கு என்எல்சி நிறுவனத்தில் நிரந்தர வேலையும் விவசாய நிலம் ஏக்கருக்கு 50 லட்சம் ரூபாயும் மாற்று குடியிருப்பு வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர். இதற்கு விளக்கம் அளித்த நீர்வள த்துறை அமைச்சர் துரை முருகன்,”உறுப்பினர்களில்கேள்விக்கு தொழிலாளர் நலன் மற்றும் தொழில் துறை அமைச்சர்கள் இருவரும் பதிலளிக்க வேண்டும் என்ற நிலை இருந்தாலும் இந்த பிரச்சி னையை பழுப்பு நிலக்கரி நிறு வனத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று முதலமைச்சரின் ஆலோச னைப்படி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசு அனைத்து முயற்சிகளும் செய்யும் என்றார்.