tamilnadu

img

நாகர்கோவிலில் புதிய ரவுண்டானா

நாகர்கோவில், ஜுலை 14- நாகர்கோவிலில் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் அருகில் உள்ள சாலைகளில்  கடும் போக்குவரத்து நெருக்கடியில் ஏற்பட்டு வருகிறது. இதைப் போக்க ஆட்சியர் அலுவல கத்தின் முன் பகுதியில் ரவுண்டானா  அமைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளது. ரவுண்டானா மற்றும் கழிவு நீர் ஒடை அமைக்க ரூ.1.50 கோடியில் பணிகள் தொடங்கப்பட்டன. பழைய ரவுண்டா னா அகற்றப்பட்டு அதிலிருந்த சுதந்திர தின விழா ஸ்தூபியும் உயர் கோபுர மின் விளக்குகளும் மாற்றி வைக்கப்பட்டன. இந்நிலையில் வியாழனன்று (ஜுலை 14) ரவுண்டானா அமைப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டன. முதற்கட்ட மாக சாக்கு மூடைகளில் மணல் நிரப்பி ரவுண்டானாவின் மாதிரி தோற்றம் அமைக்கப்பட்டு உள்ளது. சோதனை அடிப்படையில் 3 நாட்கள் வாகனங்க ளை இயக்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள்ளது. அதன் பிறகு ரவுண்டானா அமைக்கப்பட உள்ளது. ரவுண்டானாவின் வடக்கு பக்கத் தில் 10 மீட்டர் நீளத்திற்கும் கிழக்கு பக்கத்தில் 18 மீட்டர் நீளத்திற்கும் மேற்கு பக்கத்தில் 20 மீட்டர் நீளத்திற்கும் வாக னங்கள் எந்த ஒரு நெருக்கடியும் இன்றி செல்லும் வகையில் தடுப்புகள் அமைக்கவும் நட வடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. புதிய ரவுண்டானா பணி தொடங்கப்பட்டதையடுத்து அந்த பணியை ஆட்சியர் அரவிந்த், மேயர் மகேஷ் ஆகியோர் வியாழனன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்த னர். அப்போது ஆணையாளர் ஆனந்த மோகன் மற்றும் கவுன்சிலர்கள் உடன் இருந்தனர்.