tamilnadu

img

புதுவை மின்துறை தனியார்மயம்: அரசுக்கு எதிராக வலுத்தது போராட்டம்

புதுச்சேரி, செப்.30- புதுச்சேரி மின்துறையை தனியார் மையமாக்கு வதை எதிர்த்து மூன்றாவது நாளாக ஊழியர்கள், பொறி யாளர்கள் போராட்டம் நடத்தி னர். புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கப்படும் என  அரசு அரசாணை வெளி யிட்டதை அடுத்து புதுச்சேரி மின்துறை பொறியாளர்கள் மற்றும் ஊழியர்கள் வேலையை புறக்கணித்து காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதுச்சேரி உப்பளம் தலைமை மின்துறை  வளாகத்தில் வெள்ளிக்கிழமை (செப். 30) மூன்றாவது நாள்  போராட்டத்திற்கு பொறியாளர் ஊழியர் சங்கங்களின் போராட்டக் குழு ஒருங்கி ணைப்பு தலைவர் அருள் மொழி  தலைமை தாங்கினார். போராட்டக் குழு ஆலோசகர் ராமசாமி உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் தலைவர்கள், ஊழியர்கள் கலந்து கொண்ட னர். ஆளுநர்-முதல்வர் புதுச்சேரியில் மின்துறை தனியார் மயமாக்கும் நடவடிக் கையால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜனை முதல்வர் ரங்கசாமி ஆளுநர் மாளிகையில் சந்தித்தார். இதில்  சுமூக முடிவு எட்டப்படவில்லை என்று கூறப்படுகிறது.

மறியல் இதனுடைய நகர மற்றும்  கிராமப் பகுதிகளில் மின்தடை  ஏற்பட்டுள்ளதால் பொதுமக்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், ஆங்காங்கே சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர்.  கோரிமேடு எல்லைப் பகுதியில் நடந்த மறியல் போராட்டத்தால் தமிழ கத்திற்கும் புதுச்சேரிக்கும் செல்லக்கூடிய வாகனங்கள் அனைத்தும் அங்கங்கே நிறுத்தப்பட்டன. எல்லையில் இரு மாநில காவல்துறையின ரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதேபோன்று புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையி லுள்ள மீனவ கிராம மக்களும் மறியலில் ஈடுபட்டனர். இதனால் இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கும் பேருந்துகள் நின்றதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மதச்சார்பற்ற கட்சிகள் இந்த நிலையில் திமுக, காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட மதச்சார்பற்ற முற் போக்கு கூட்டணி கட்சிகளின் சார்பில் மின்துறை தனியார் மயத்தை கைவிட கோரி  அண்ணா சிலை முன்பு ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.