சென்னை,ஜன.17- சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக நியமிக்கப் பட்டுள்ள செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப்பேற்க உள்ளார். சென்னை வானிலை மைய இயக்குநராக கடந்த சில ஆண்டு களாக புவியரசன் பணியாற்றி வந்தார். கடந்த ஆண்டுகளில் பரு வமழை பற்றிய தகவல்களை குறித்த நேரத்தில் அரசுக்கும் மற்றும் ஊடகங்களுக்கும் வழங்கினார். சமீபத்தில் சென்னையில் பெய்த பருவமழை யின்போதும் அவரது பணி முக்கிய அங்கம் வகித்தது. இந்தநிலையில் அவருக்கு பதிலாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனராக செந்தாமரை கண்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய இயக்குநர் செந்தாமரை கண்ணன் விரைவில் பொறுப் பேற்கிறார்.