மதுரை சித்திரை திருவிழாவில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கல்யாண நிகழ்ச்சி மே 2 செவ்வாயன்று நடை பெற்றது. இதனை முன்னிட்டு தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் சார்பில் மத நல்லிணக்க நீர் மோர் பந்தல் அமைத்து, திருவிழாவை காண வந்த மக்களுக்கு நீர்மோர் வழங்கப்பட்டது. தூய மரியனை மேல்நிலைப் பள்ளி அருகில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியை மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன்,தெற்கு சட்டமன்ற உறுப்பினர் புதூர் மு. பூமிநாதன், துணை மேயர் டி.நாகராஜன் ஆகியோர் துவக்கி வைத்தனர். மாவட்டக்குழு உறுப்பினர் யூ.எஸ்.அபுதாஹிர் தலைமை வகித்தார். மாவட்டக்குழு உறுப்பினர் எம்.மாயழகு முன்னிலை வகித்தார். சிபிஎம் மாவட்டச் செயலாளர் மா. கணேசன், மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், தெற்கு பகுதிக்குழு செயலாளர் ஜெ.லெனின், சிறுபான்மை நலக்குழு மாவட்ட தலைவர் கே.அலாவு தீன், மாவட்டச் செயலாளர் என். கணேசமூர்த்தி, மாவட்ட பொருளாளர் எம்.ஜான்சன், அருட்தந்தை சா.மரிய நாதன், அருட்தந்தை எஸ்.லாரன்ஸ், மதிமுக மாவட்டச் செயலாளர் ஏ.முனிய சாமி ஆகியோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் போனி பேஸ் நன்றி கூறினார்.