tamilnadu

img

ஜல்லிக்கட்டுப்போல் நீட் விலக்கு மசோதாவுக்கும் போராட வேண்டியிருக்கும்

சென்னை, மார்ச் 11- தமிழக சட்டமன்றத்தில் நீட் விலக்கு கோரி நிறைவேற்றப்பட்ட மசோதாவை ஆளுநர் ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தினால் சென்னையில் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி நடைபெற்ற போராட்டத்தை போல் மீண்டும் ஒரு போராட்டம் நடத்த வேண்டியிருக்கும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்   ஜி.ராம கிருஷ்ணன் எச்சரித்தார். ‘நீட்’ தேர்விலிருந்து விலக்கு கோரி  தமிழக அரசு நிறைவேற்றிய மசோ தாவை உடனடியாக குடியரசுத் தலைவருக்கு ஆளுநர் அனுப்பி வைக்கக் கோரி இந்திய மாணவர் சங்கம் சார்பில் மார்ச் 9ஆம் தேதி காலை 8 மணி முதல் 48 மணி நேர  உண்ணாநிலைப் போராட்டம் சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே நடைபெற்றது. இந்த போராட்டத்தை வியாழனன்று (மார்ச் 10) மாலை முடித்துவைத்து அவர் பேசியதாவது: தமிழகத்தில் கல்வி உரிமையை பாதுகாக்க இந்திய மாணவர் சங்கம் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளது. தற்போது மாணவர் சங்கம் நடத்தும் இந்த உண்ணா நிலை போராட்டம் குறிப்பிட்ட மாண வர்களுக்காக அல்ல.

ஒட்டுமொத்த தமிழகத்தில் உள்ள மாணவர்களின் நலனுக்காக என்பதை அனைத்து பகுதியினரும் புரிந்துகொள்ள வேண்டும்.  அதிமுக ஆட்சியில் நீட்  வேண்டாம் என்று இரண்டு மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டு அன்றைய ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநர் ஒன்றிய அரசின் அமைச்சரவைக்கு அனுப்பி  வைத்தார். ஆனால் அமைச்சரவை அதை ஜனாதிபதிக்கு அனுப்ப வில்லை. அப்போதைய மாநிலங்களை உறுப்பினராக இருந்த டி.கே.ரங்க ராஜன் மசோதா நிறைவேற்றப்பட்டு அமைச்சரவைக்கு அனுப்பப்பட்ட மசோதா என்ன ஆனது எனக் கேட்டு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு கடிதம் எழுதினார். அவர் எனக்கு அப்படி எந்த மசோதாவும் வரவில்லை என தெரிவித்தார். அதை அதிமுகவும் கண்டுகொள்ளவில்லை. மாணவர்களின் உரிமை, எதிர்காலம் பறிக்கப்படுகிறது என அனைத்து தரப்பினரும் கொந்தளித்தனர்.  

        தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் சட்டப்பேரவையில் நீட்  விலக்கு கேட்டு மசோதா நிறைவேற்றப் பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது. அந்த மசோதாவை ஆளுநர் ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பி வைக்காமல், 4 மாதங்க ளாக கிடப்பில் போட்டுவிட்டு, இந்த மசோதா மாநில நலனுக்கானதல்ல எனக்கூறி மீண்டும் மாநில அரசுக்கே திருப்பி அனுப்பியுள்ளார் அப்படி திருப்பி அனுப்புவதற்கு ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது. ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள நீட் தேர்வு முறை மாணவர்கள் நல னுக்கு விரோதமானது. கல்வி என்பது பொது பட்டியலில் உள்ளது. பொது பட்டியலில் இருக்கும் ஒரு துறையில் மாநில அரசும் சட்டம் இயற்றலாம், ஒன்றிய அரசும் சட்டம் இயற்றலாம். ஆனால் மாநில அரசு சட்டம் இயற்றினால் அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் தேவை. அந்த அடிப்படையில் தற்போது தமிழ கத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்பது சட்டப்பூர்வமானது. ஜல்லிக்கட்டு நடத்த உச்ச நீதிமன்றம் தடை விதித்த போது,  ஜல்லிக்கட்டு நடத்துவது எங்களது  உரிமை, அதை யாரும் தடுக்க  முடியாது என மாநிலம் முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றன.  ஆனால் ஒன்றிய அரசு கண்டுகொள்ள வில்லை.

இதையடுத்து சென்னை  மெரினா கடற்கரையில் பல்லாயிரக் கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் வேறு வழியின்றி ஜல்லிக்கட்டு நடத்த ஒப்புதல் அளிக்க வேண்டும் என   சட்டப்பேரவையில் அதிமுக அரசு  மசோதாவை நிறைவேற்றி ஆளு நருக்கு அனுப்பியது. ஆளுநர் அதை ஜனாதிபதிக்கு அனுப்பினார். அங்கு ஒப்புதலும் கிடைத்தது. தற்போது மீண்டும் நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கேட்டு மாநில சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுந ருக்கு அனுப்பி ஒரு மாத காலமாகி றது. ஆளுநர் அதை ஒன்றிய அமைச்சரவைக்கு அனுப்பாமல் காலம் தாழ்த்தி வருகிறார். எனவே  ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரி  சென்னையில் நடைபெற்ற போராட்டம் போன்று இந்த மசோதா வுக்கும் நடத்தவேண்டிய சூழல் ஏற்படும் என்பதை ஆளுநருக்கு எச்சரி க்கையாக தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். மாணவர்களின் நலனுக்காக, சமூக நீதியை பாது காக்க நீங்கள் நடத்தும் அத்தனை போராட்டங்களுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தோளோடு தோள் நிற்கும். இவ்வாறு அவர் பேசினார். இதில் மாணவர் சங்கத்தின் மாநிலத் தலைவர் ஏ.டி.கண்ணன், மாநிலச் செயலாளர் வீ.மாரியப்பன், மத்தியக்குழு உறுப்பினர்கள் ரா.ஜான்சிராணி, மு.சத்தியாராம், துணைத் தலைவர்கள் ம.கண்ணன், க.நிருபன் சக்கரவர்த்தி, துணைச் செயலாளர்கள் ஆறுபிரகாஷ், ஜி.அரவிந்த்சாமி, மாவட்டச் செயலாளர்கள் மு.நித்திஷ்குமார் (வட சென்னை), லொ.விக்னேஸ்வரன் (மத்திய சென்னை), ரா.பாரதி (தென்  சென்னை) உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் கலந்து கொண்டனர்.