சென்னை,பிப்.7- தமிழ்நாடு சட்டமன்றத்தில் 230 உறுப்பினர்கள் ஒருமனதாக நிறைவேற்றி அனுப்பி வைத்த மசோதாவுக்கு ஒப்புதல் கொடுக்காமல் 143 நாட் களுக்கு பிறகு, சில மாற்றங்கள் தேவை என்று திருப்பி அனுப்பிய ஆளுநர் முடிவுக்கு மாநிலம் முழுவதும் கண்டனம் வலுத்து வருகிறது. இந்த நிலையில், அடுத்த கட்ட நடவடிக்கை கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்து கட்சிகளின் கூட்டத்தை மாநில அரசு கூட்டியது. இந்த கூட்டத்தை அதிமுக, பாஜக, புரட்சி பாரதம் ஆகிய கட்சிகள் புறக்கணித்தன. நீட் தேர்வுக்கு விலக்கு சட்டமுன்வடிவு மீண்டும் சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறை வேற்றப்படும். அந்த மசோதா குடியரசுத் தலை வரின் ஒப்புதலை பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. இதற்காக சட்டமன்றத்தின் சிறப்புக் கூட்டம் பிப்.8 ஆம் தேதி காலை 10 மணிக்கு புனித ஜார்ஜ் கோட்டையில் நடத்தப்படும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்தார்.
இதற்கான ஏற்பாடுகள் நடந்து வரு கின்றன. பேரவை மண்டபம் மற்றும் முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட அனைத்து அறை களும் புதுப்பிக்கப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி யளிக்கிறது. மேலும்,பேரவை மண்டபத்தில் கணினி, மென்பொருள்கள் என நவீனம் நுழைகிறது. இதேபோன்று, ஆளும் கட்சி, அதிமுக, காங்கிரஸ், சிபிஎம்,சிபிஐ உள்ளிட்ட எதிர்க்கட்சி களின் உறுப்பினர்கள் அறைகளும் புதுப்பிக்கப்பட்டுள்ளன. பேரவை மண்டபத்தில் பேரவைத் தலைவர், முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள், செய்தியாளர்கள் இருக்கைகள் உள்ளிட்டவைகளும் புதுப்பிக்கப் பட்டுள்ளன. இரவு-பகலாக முழு வீச்சில் நடந்து வரும் புதுப்பிக்கும் பணியால் புதுப்பொலிவுடன் காட்சியளிக்கும் புனித ஜார்ஜ் கோட்டை பேரவை மண்டபத்தை திங்களன்று(பிப்.7) முத லமைச்சர் பார்வையிட்டது குறிப்பிடத்தக்கது. செவ்வாயன்று(பிப்.8) காலை 10 மணிக்கு சட்டமன்ற சிறப்பு கூட்டம் நடத்தப்படுகிறது.நீட் தேர்வுக்கு விலக்கு கேட்டு மூன்றாவது முறையாக சட்டமசோதா நிறைவேற்றி குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.