tamilnadu

img

மதுரை அருகே தலித் மக்கள் மீது தாக்குதல் இருசக்கர வாகனங்கள், வீடுகள் சேதம்; நான்கு பேர் காயம்

மதுரை, ஜூன் 9- மதுரை அருகே தலித் மக்கள் மீது சாதி ஆதிக்க சக்திகள் தாக்குதல் நடத்தியுள்ளன. இதில் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்து விட்டன. ஐந்து இரு சக்கர வாகனங்கள் உடைக் கப்பட்டன. தலித் சமுகத்தைச் சேர்ந்த நான்கு பேர் காயமடைந்துள்ளனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சௌடார்பட்டி. இங்கிருந்து இரண்டு கி.மீ., தொலைவில் உள்ளது. எஸ்.வலைய பட்டி கிராமம். இங்கு தலித் மக்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தி னர் பெருவாரியாகவும் உள்ளனர். கடந்த ஏப்.20-ஆம் தேதி இங்குள்ள முத்தா லம்மன் கோவில் திருவிழா 13 ஆண்டுகளுக்குப் பின்னர் நடைபெற்றுள்ளது. கோவிலில் நேர்த்திக் கடன் செலுத்துவதற்காக தலித் மக்கள் பெரு வாரியாக காப்பு கட்டியுள்ளனர். இதனையறிந்த சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்களை கோவில் பக்கமே வரவிடக்கூடாது எனக்கூறி, காப்பு கட்டி விட்ட பூசாரியை அழைத்து அவருக்கு “உப தேசம்” வழங்கியுள்ளனர். இதையடுத்து தலித் மக்களைச் சந்தித்த பூசாரி அவர்களிடம் ஏதேதோ கூறி கட்டிய காப்பை அவிழ்த்துவிடுமாறு கூறி யுள்ளார். தலித்துகளும் வேறு வழியின்றி காப்பை கையிலிருந்து அகற்றிவிட்டனர். அன்றி லிருந்து சாதி ஆதிக்க சக்திகள் தலித் மக்கள் மீது கோபமாகவே இருந்துள்ளனர்.  கோவில் திருவிழாவைத் தொடர்ந்து ஜல்லிக் கட்டு நடத்த முடிவு செய்துள்ளனர். இதற்கு முறையாக அனுமதி பெறாததால் அரசு ஜல்லிக் கட்டு நடத்த அனுமதிக்கவில்லை. ஜல்லிக்கட்டு நின்றுபோனதற்கும் தலித் மக்கள் தான் கார ணம் என சாதி ஆதிக்க சக்திகள் நினைத்துள்ளன. இதைத் தொடர்ந்து பொதுக் குளியல் தொட்டி யில் அவர்களை குளிக்க அனுமதிக்க மறுப்பது, ரேசன் கடையில் அனைவரும் ஒன்றாக பொருட் கள் வாங்குவதைத் தடுப்பது, முறையாக வழங்கி வந்த குடிநீர் விநியோக நேரத்தை குறைப்பது போன்ற நடவடிக்கைகளில் அவர்கள் ஈடு பட்டுள்ளனர். இதன் உச்சகட்டமாக சனிக்கிழமையன்று தலித் மக்களுக்கு அரைமணி நேரமே குடிநீர் வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்கள் காவல்நிலையத்தில் புகார் செய்ய புறப் பட்டுள்ளனர். தகவலறிந்த சாதி ஆதிக்க சக்தி கள் தலித் மக்களின் வீடுகளுக்குள் புகுந்து அவர்களைத் தாக்கியுள்ளனர். இதில் தலித் மக்களின் வீடுகள் தாக்குதலுக்குள்ளாகின.  தாக்குதல் குறித்து தலித் மக்கள் கூறுகை யில், ‘‘சாதி ஆதிக்க சக்திகளின் தாக்குதலில் 35-க்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள் ளன. ஐந்து இரு சக்கர வாகனங்கள் உடைக்கப் பட்டுள்ளன. ஓய்வு பெற்ற தலையாரி முனி யாண்டி, அரசன் மகன் ஆறுமுகம் ஆகியோர் படு காயமடைந்து திருமங்கலம், மதுரை மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். தொந்தி மகன் கருப்பு, சண்முகம் மகன் மணி ஆகி யோரும் காயமடைந்துள்ளனர். கட்டியிருந்த ஆடு, மாடுகளை அவிழ்த்துவிட்டுவிட்டனர். ஆடு, மாடுகளும் காயமடைந்துள்ளன. மீட்டர் பெட்டிகள், தெருவிளக்குகள் உடைக்கப்பட் டுள்ளன’’ என்றனர். மேலும் அவர்கள் கூறுகையில், கோவில் திரு விழாவைத் தொடர்ந்து சாதி ஆதிக்க சக்திகள் ஊரில் ‘கருங்கிடா’ (ஆடு) வெட்டிவிட்டனர். அப்படி வெட்டிவிட்டால் எங்களுக்கும் அவர் களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று அர்த்தம். இங்குள்ள பள்ளியில் எங்கள் வீட்டு குழந்தைகள் சாப்பிடக்கூடாது எனக்கூறிவிட்ட னர். இதனால் நாங்கள் வீட்டிலிருந்தே மதிய உணவும், தண்ணீரும் கொடுத்தனுப்புகிறோம். இது மாதிரி வெளியே தெரியாத அளவிற்கு ஏரா ளமான கொடுமைகள் செய்கின்றனர். அதை அனுபவித்துவருகிறோம்’’  என்று குமுறினர். மதுரை மாவட்ட ஆட்சியராக பொறுப்பு வகித்து மாறுதலாகிச் சென்றுள்ள நாகராஜன் சுமார் 1,500 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்கியுள்ளார். அவர்களில் இருவர் எஸ்.வலையபட்டிக்கு நிய மிக்கப்பட்டுள்ளனர். நியமிக்கப்பட்ட இருவரும் தலித் என்பதால் சாதி ஆதிக்க சக்திகள் அவர் களை ஏற்க மறுத்துவிட்டனர். வட்டார வளர்ச்சி அலுவலரும் வேறுவழியின்றி அவர்கள் இரு வரையும் மதிப்பனூருக்கும், நடுவக்கோட்டைக் கும் மாற்றிவிட்டதாக தகவல்கள் தெரி விக்கின்றன. பாதிக்கப்பட்ட மக்கள் திங்களன்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து முறையிட உள்ளனர். எஸ்.வலையபட்டியில் காவல்துறை முகா மிட்டுள்ளது. கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. சாதி ஆதிக்க சக்திகளின் தாக்குதலில் சேதம டைந்த இரு சக்கர வாகனங்களை ஞாயிறன்று காவல்துறையினர் நாகையாபுரம் காவல்நிலை யத்திற்கு தூக்கிச் சென்றனர். பாதிக்கப்பட்ட தலித் மக்களை தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் டி.செல்லக் கண்ணு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருமங்கலம் தாலுகா செயலாளர் ஜி.முத்து ராமன், உசிலம்பட்டி ஒன்றியச் செயலாளர் ராமர், பேரையூர் ஒன்றியச் செயலாளர் வி.சமையன், மாவட்டக்குழு உறுப்பினர் முருகன் ஆகியோர் சந்தித்து ஆறுதல் கூறினர். மதுரை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் ஆறுமுகம் என்பவரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை புறநகர் மாவட்டச் செயலாளர் சி.ராமகிருஷ்ணன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் கே.ராஜேந்திரன், டி.ஏ.இளங்கோவன், தீண்டாமை ஒழிப்பு முன்ன ணியின் மதுரை மாவட்டச் செயலாளர் பால சுப்பிரமணியன் ஆகியோர் சந்தித்து நலம் விசா ரித்தனர்.