ஒன்றிய ஆட்சி பொறுப்பில் உள்ள பிஜேபி அரசு ஆட்சி பொறுப்பேற்றதி லிருந்து நாட்டு மக்களுக்கு எதிரான பொரு ளாதார கொள்கைகளை அமல்படுத்தி வருகிறது. குறிப்பாக இந்தியாவின் முது கெலும்பாக உள்ள வேளாண்மையையும், விவசாயிகளையும் கடும் நெருக்கடிக்குள் தள்ளியுள்ளது. 2014இல் வேளாண் நெருக்கடிகளால் நாடு முழுவதும் விவசாயிகள் தற்கொலை கள் நடப்பதை தடுப்போம். விவசாயிகள் உற்பத்தி செய்திடும் விளை பொருட்களுக்கு உரிய விலை மட்டுமல்ல லாபகரமாக விலை கொடுப்போம், வேளாண் தொழில் வளர்ச்சிக்கு தேவையான நிதிகள் ஒதுக்குவோம் என்றெல்லாம் சொல்லி, ஆட்சி க்கு வந்த மோடி தலைமையிலான பாஜக அரசு இந்தியாவின் விவசாயத்தையும், விளை நிலங்களையும் பெரும் நிறுவனங்களிடமும் மடைமாற்றம் செய்வதற்கான மூன்று வேளாண் சட்டங்களை கொண்டு வந்தது. இந்த சட்டங்களை ஒன்றிய அரசு திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தும், விவசாய உற்பத்தி பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் கொண்டு வர வலியுறுத்தியும், நாடு முழு வதும் விவசாயிகள் வாங்கியுள்ள விவ சாயக் கடன்களை ஒரு தடவை ரத்து செய்திடவும், மின்சார திருத்தச் சட்டத்தை நிறை வேற்றக்கூடாது என்றும் கோரிக்கைகளை முன்வைத்து 2020ஆம் ஆண்டு நவம்பர்-26ஆம் தேதி தலைநகர் தில்லியை நோக்கி விவசாயிகள் பேரணியாக (தில்லிச் சலோ) புறப்பட்டனர்.
ஒன்றிய பாஜக அரசு விவசாயிகளை தில்லி நகரத்திற்குள் வரவிடாமல் தில்லியில் எல்லையிலேயே தடுத்தது. அதனால் தேசிய நெடுஞ்சாலைகளிலேயே போராட்டத்தை விவசாயிகள் துவங்கினர். 13 மாத காலம் தில்லியின் 6 எல்லைகளில் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் உலகத்தின் கவனத்தை ஈர்த்தது. அரசின் அடக்குமுறைகளை தகர்த்து ஒன்றுபட்ட ஐக்கியமான போராட்டமாக வளர்ச்சி பெற்றது. தில்லி எல்லைகளில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டது. 500க்கும் மேற்பட்ட விவசாய அமைப்புகள் இணைந்து எஸ்.கே.எம் (சம்யுக்த கிசான் மோர்சா) என்ற அமைப்பை உருவாக்கினர். போராட்டக் களத்தில் 728 விவசாயிகள் தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். விவ சாயிகளின் வீரமிக்க போராட்டத் தை எதிர்கொள்ள முடியாத மோடி யும், பாஜக ஒன்றிய அரசும், மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெற்றது. யாராலும் அசைக்க முடியாது என்ற பிரதமர் மோடி மீது உருவாக்கப்பட்ட போலியான பிம்பத்தை இந்திய விவசாயிகளின் போராட்டம் உடைத்தது. போராட்டத்தை முன்னெடுத்த எஸ்.கே.எம் அமைப்போடு ஒன்றிய அரசு பேச்சுவார்த்தை நடத்தி எழுத்துப் பூர்வமான உறுதிமொழியை கொடுத்த பின்தான் தில்லிப் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
நிறைவேற்றப்படாத உறுதிமொழிகள்
- குறைந்தபட்ச ஆதார விலைக்கான சட்டத்தை உருவாக்க எஸ்.கே.எம் அமைப்பின் பிரதிநிதிகளும் கொண்ட குழுவை அமைப்பது.
- மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்கு முன் எஸ்.கே.எம் அமைப்போடு விவாதித்து முடிவெடுப்பது.
- போராட்டத்தின் போது உயிரிழந்த அனைத்து விவசாயிகளின் குடும்பங் களுக்கும் இழப்பீடு வழங்குவது.
- போராட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் மீது நாடு முழுவதும் போடப்பட்டுள்ள வழக்கு களை ரத்து செய்வது. n தில்லியைச் சுற்றியுள்ள மாநிலங்களில் வைக்கோல் எரிப்பதற்கு உள்ள தடையை நீக்குவது. இதற்கு விதிக்கப்பட்ட அனைத்து தண்டனைகளையும், அபராதங்களையும் ரத்து செய்வது.
உள்ளிட்ட உறுதிமொழிகளை எழுத்துப்பூர்வ மாக கொடுத்த ஒன்றிய பாஜக அரசு ஓராண்டு முடிந்த பின்பும் விவசாயிகளுக்கு கொடுத்த உறுதிமொழிகளை நிறைவேற்றாமல் விவசாயிகளின் முதுகில் குத்தி துரோகம் இழைத்துள்ளதோடு விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை மீறி கடந்தாண்டு மின்சாரச் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தது. நாடாளுமன்றத் தில் எதிர்க்கட்சியின் கடுமை யான எதிர்ப்பிற்கு பிறகு தற்போது நாடாளுமன்ற நிலைக்குழுவில் விவாதிப்ப தற்காக அனுப்பப்பட்டுள்ளது. மின்சார திருத்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் சட்ட மாக்கப்பட்டால் நாடு முழு வதும் பல மாநிலங்களில் மின்சார சலுகைகளை அனுபவித்து வந்த பொது மக்கள் பாதிக்கப்படுவார்கள். தமிழ்நாட்டில் விவசாயத் திற்கு மட்டும் 22 லட்சம் மின்இணைப்புகள் கட்டணமில்லாமல் விவசாயிகள் பயன்படுத்தி வருகின்றனர். மேலும் விசைத்தறி, சிறு-குறு தொழில் நடத்துபவர்கள் அனுபவித்து வரும் மின்கட்டண சலுகை, 100 யூனிட் வரை கட்டணமில்லாத மின்சாரம் ஆகியவை முற்றி லும் ரத்து செய்யப்படும். மின்உற்பத்தி, வினியோகம் உட்பட ஒட்டுமொத்த மின் சாரத்துறையையே தனியார்மயமாக்கு வதற்காகத் தான் ஒன்றிய அரசு துடித்துக் கொண்டுள்ளது. சமீபத்தில் கூட பாஜக கூட்டணி ஆட்சி மகாராஷ்டிரா மாநி லத்தில் மின்சாரத்தை தனியாரிடம் ஒப்ப டைக்க எடுத்த முடிவிற்கு எதிராக வலுவான போராட்டம் மூலம் தடுக்கப்பட்டுள்ளது.
குறைந்தபட்ச ஆதார விலை
விவசாயிகள் உற்பத்தி செய்திடும் அனைத்து விளை பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை தீர்மானிக்க குழு அமைக்கப்படும். அந்த குழுவில் எஸ்.கே.எம் அமைப்பின் பிரதிநிதிகள் இடம் பெறுவார்கள் என உறுதியளித்த ஒன்றிய அரசு இதுவரை அதற்கான குழு அமைக்க வில்லை. மேலும் தற்போது வரை ஒன்றிய அரசு விவசாயிகள் உற்பத்தி செய்யும் விளை பொருட்களில் 23 வகையான விளை பொருட்களுக்குத்தான் விவசாயிகளுக்கு கட்டுபடியாகாத விலையை ஒன்றிய அரசு இதுவரை தீர்மானித்து வருகிறது. குறைந்தபட்ச ஆதார விலை என்பது 2013இல் தேசிய வேளாண் கமிசன் பரிந்து ரைத்துள்ள C2+50 என்ற அடிப்படையில் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது விவ சாய உற்பத்திச் செலவுகளோடு சேர்த்து ஒன்றரை மடங்கு உயர்த்தி விலையாக தீர்மானிக்க வேண்டுமென்பதை எஸ்.கே.எம் அமைப்பு வலியுறுத்தி வருகிறது. உயிர்நீத்த விவசாயிகளுக்கு இழப்பீடு - வழக்குகள் ரத்து 383 நாட்கள் நடைபெற்ற போராட்டத்தில், போராட்டக்களத்தில் உயிரிழந்த விவ சாயிகள் 715 பேர்களுடைய குடும்பங் களுக்கும், அரியானா மாநிலத்தில் போராட்டக் களத்தில் காவல்துறையினர் காட்டு மிராண்டித்தனமான தாக்குதலால் கொல்லப்பட்ட விவசாயிகள் மற்றும் உ.பி மாநி லத்தில் லக்கிம்பூர் கேரியில் ஊர்வலம் நடத்திய விவசாயிகள் மீது ஒன்றிய உள்துறை அமைச்சரின் மகன் கார் ஏற்றி படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் உள்ளிட்டவர்களின் குடும்பத்தினருக்கு இதுவரை ஒன்றிய அரசு ஏற்றுக் கொண்டபடி எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடுமுழுவதும் நடைபெற்ற போராட்டங் களில் கலந்து கொண்ட விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள பல்லாயிரக்கணக்கான வழக்குகளை ரத்து செய்யாமல், விவசாயிகள் நீதிமன்றங்களுக்கு செல்லும் நிலையை ஒன்றிய அரசு உருவாக்கியுள்ளது.
டிராக்டர் பேரணி
2021 ஜனவரி 26 அன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறக் கோரி குடியரசு தினத்தன்று நாடு முழுவதும் எஸ்.கே.எம் அறைகூவல் விடுத்து நடைபெற்ற டிராக்டர் பேரணி போல், வரும் ஜனவரி 26ஆம் தேதி நாடு முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் ஒன்றிய பாஜக அரசின் விவசாயிகளுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்தும், ஒன்றிய அரசின் விவசாயிகளுக்கு எதிரான கொள்கை களை எதிர்த்தும் நடைபெறும் டிராக்டர் பேரணியை தமிழ்நாட்டில் ஆயிரக்கணக் கான டிராக்டர்களுடன் பல்லாயிரக் கணக்கான விவசாயிகளை திரட்டி வெற்றிகர மாக நடத்திடுவோம்! விவசாயிகள் விரோத, தொழிலாளர் விரோத கார்ப்பரேட் ஆதரவுக் கொள்கை களை அமல்படுத்திவரும் மோடி தலைமை யிலான ஒன்றிய பாஜக அரசை 2024இல் நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஆட்சி பொறுப்பிலிருந்து வெளியேற்றிட தொடர்ந்து போராட்டத்தை முன்னெடுப்போம்!