குடியரசுத் துணைத் தலைவர், பாஜக எம்.பி.,க்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்டனம் முழங்குக!
அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் அறைகூவல்
நீதித்துறைக்கு எதிராக மிக மோச மான முறையில் வார்த்தைகளை உதிர்த்துள்ள குடியரசுத் துணைத் தலை வர் ஜகதீப் தன்கர் மற்றும் பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் நிஷிகாந்த் துபே ஆகியோருக்கு எதிராக நாடு தழுவிய அளவில் கண்டன முழக்கங் களை எழுப்புமாறு அகில இந்திய வழக் கறிஞர்கள் சங்கம் அறைகூவல் விடுத் துள்ளது. இது தொடர்பாக, அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத்தின் தலைவர் பிகாஷ் ரஞ்சன் பட்டாச்சார்யா மற்றும் பொதுச் செயலாளர் பி.வி. சுரேந்திர நாத் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக் கையில் கூறியிருப்பதாவது: குடியரசுத் துணைத் தலைவர் ஜக தீப் தன்கர் மற்றும் பாஜக எம்.பி. நிஷி காந்த் துபே உச்சநீதின்றத்தின் தலைமை நீதிபதி மறும் இதர நீதிபதிகளுக்கு எதி ராக அச்சுறுத்தும் விதத்திலும், கேலி செய்யும் விதத்திலும் வார்த்தைகளை உதிர்த்திருப்பதற்கு அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தன் கண்டனத் தையும், எதிர்ப்பையும் தெரிவித்துக் கொள்கிறது. நீதித் துறையின் சுதந்திரமான செயல் பாடுகளுக்கு எதிராக ஆட்சியாளர் களும், அதன் உயர்மட்ட தலைவர் களும் கருத்துகளைக் கூறுவது அதி கரித்து வருகிறது. குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் உதிர்த்துள்ள வார்த்தைகள் நீதித் துறையை அச்சுறுத் துவதைத் தவிர வேறல்ல. தன் மீது எவரும் எவ்விதமான தண்டனையும் அளிக்க முடியாது என்கிற தைரியத்து டன் அவர் நீதித்துறையை அச்சுறுத்தி வருகிறார். அல்லது அதன்மீது தாக்கு தலைத் தொடுத்து வருகிறார். இதன்மூலம், இவர் நீதித் துறையின் சுதந்திரமான செயல்பாடுகளின் மீது வெளிப்படையாகவே தலையிட்டுக் கொண்டிருக்கிறார் என்பது தெளி வாகும். இவை நீதித்துறையை மிரட்டிப் பணியவைப்பதற்கான சங் பரிவாரத் தின் நன்கு திட்டமிடப்பட்ட சூழ்ச்சித் திட்டங்களின் ஒரு பகுதியேயாகும். தற்போது பாஜக எம்.பி.யும், தலை வருமான நிஷிகாந்த் துபே, வக்ஃப் திருத்தச் சட்டம் விஷயத்தில் உச்ச நீதி மன்றத்தின் தலையீட்டைக் குறிப்பிட்டு, இந்தியாவில் நடந்த அனைத்து வகுப்பு வாத கலவரங்களுக்கும் இந்திய தலைமை நீதிபதியும் நீதித்துறையும் பொறுப்பு என்று நீதித்துறையை அவ மதித்திடும் விதத்தில் அவதூறான முறையில் அறிக்கைகளை வெளி யிடத் துணிந்துள்ளார். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப் பட்ட சட்டத்தை ரத்து செய்ய, நீதிமன்றத் திற்கு அதிகாரம் இல்லை என்றும், அது சட்டத்தை விளக்க மட்டுமே முடியும் என்றும் கூறியிருக்கிறார். இந்தக் கூற்று கள் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் நீதித் துறைக்கு இருக்கின்ற அதிகாரங் களை அரித்து வீழ்த்திடும். இது சங் பரிவாரத்தின் இந்துத்துவா ராஷ்ட்ரம் மற்றும் பாசிசத்தைப் பின்பற்றுவதைத் தடுக்கிறது. இந்தப் பின்னணியில், “அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்ப தும், ஜனநாயகத்தைப் பாதுகாப்பதும்” நம் கடமையும் பொறுப்பும் ஆகும். நீதித் துறையின் சுதந்திரம் என்பது நமது ஜனநாயகத்திற்கு அவசியமான, நமது அரசமைப்பின் புனிதமான கொள்கை மற்றும் அடிப்படையாகும். நீதித்துறைக்கு எதிராக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் மற்றும் பாஜக எம்.பி., நிஷிகாந்த் துபே ஆகியோரின் இத்தகைய அவ மதிப்பு மற்றும் அவதூறுப் பேச்சுக் களை நாங்கள் கண்டித்து, எதிர்ப்பு தெரி வித்துக் கொள்கிறோம். இவர்களின் இத்தகைய கூற்றுகளுக்கு எதிராக அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கத் தின் அனைத்துக் கிளைகளும், நீதித் துறையின்கீழ் செயல்படும் அனைத்து சகோதர அமைப்புகளும் அமைதியான முறையில் எதிர்ப்புக் குரலை எழுப்பிட வேண்டும் என்று அறைகூவல் விடுக் கிறோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்து உள்ளனர். (ந.நி.)