சென்னை,பிப்.19- சென்னை அருகே உள்ள ஆவடி மாநகராட்சி திரு முல்லைவாயல் ஜெயா நகர் பகுதியில் 100-க்கும் மேற் பட்ட நரிக்குறவர்கள் குடும் பத்துடன் வசித்து வருகிறார் கள். இவர்களில் 268 பேருக்கு வாக்குரிமை உள்ளது. நரிக் குறவர்களின் வாக்குக ளுக்காக வேட்பாளர்களும் தினந்தோறும் நரிக்குறவர் காலனிக்குள் சுற்றி வந்த னர். பிப்.19 அன்று வாக்குப் பதிவு தொடங்கியதும், நரி குறவர்கள் வழக்கம்போல் கும்பலாக திருமுல்லை வாயல் சோளம்பேடு தனியார் நடுநிலைப்பள்ளி யில் உள்ள வாக்குச்சாவடி மையத்திற்கு வந்தனர். 200-க்கும் மேற்பட்டோரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து மகிழ்ச்சியுடன் திரும்பி சென்றனர்.