tamilnadu

வேலூர் சிறையில் முருகனுடன் நளினி சந்திப்பு

வேலூர், ஜன. 10- சிறையில் இருந்து பரோ லில் வெளியே வந்துள்ள நளினி, வேலூர் மத்திய சிறை யில் உள்ள தனது கணவர் முருகனை சந்தித்தார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் வேலூர் பெண்கள் தனிச் சிறையில் இருந்த நளினி ஒருமாத காலம் பரோல் விடுப்பில் கடந்த டிசம்பர் மாதம் 27ஆம் தேதி  வெளியில் வந்தார். காட்பாடி யை அடுத்த பிரம்மபுரம் பகு தியில் தனது தாயாருடன் தங்கியுள்ள நளினி வேலூர் ஆண்கள் மத்திய சிறை யில் உள்ள தனது கணவர் முருகனை சந்திக்க ஒரு வார காலமாக அனுமதி கேட்டு வந்தார். இந்நிலையில் அவருக்கு  திங்களன்று அனுமதி வழங்கப் பட்டது. இதையடுத்து நளினி காவல்துறை பாதுகாப்புடன் வேலூர் மத்திய சிறைக்கு அழைத்து வரப்பட்டார். சுமார் ஒரு மணி நேரம் முரு கன், நளினி சந்திப்பு நடந் தது. பின்னர் காவல்துறை பாதுகாப்புடன் மீண்டும் நளினி பிரம்மபுரம் அழைத்து செல்லப்பட்டார்.