tamilnadu

img

துப்புரவு பணியாளர், பாதுகாவலர் சங்கம் அமைப்பு விழா நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

துப்புரவு பணியாளர், பாதுகாவலர்  சங்கம் அமைப்பு விழா நாகைமாலி எம்எல்ஏ பங்கேற்பு

நாகப்பட்டினம், ஜூன் 11- நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் அரசினர் தலைமை மருத்துவமனையில் துப்புரவு பணியாளர், பாதுகாவலர் சங்க அமைப்பு விழா நடைபெற்றது. நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் சட்டமன்றத்திற்கு உட்பட்ட ஒரத்தூர் ஊராட்சியில் செயல்பட்டு வரும், மாவட்ட அரசினர் தலைமை மருத்துவமனை கடந்த  இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கப் பட்டது. அதிநவீன வசதி மற்றும் 700 படுக் கைகளுடன் செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனை வளாகத்தில் அரசினர் மருத்துவக் கல்லூரியும் செயல்பட்டு வரு கிறது. இங்கு ஏராளமான ஊழியர்கள் பணி யாற்றுகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணி யாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் பணி யாற்றுகின்றனர். அவர்கள் இந்திய தொழிற் சங்க மையத்தில் இணைந்து பணியாற்ற விரும்பியதின் பெயரில், அரசினர் தலைமை  மருத்துவமனை தூய்மைப் பணியாளர்கள் மற்றும் பாதுகாவலர்கள் சங்க அமைப்பு விழா  சிஐடியு மாவட்டச் செயலாளர் கே. தங்க மணி தலைமையில் நடைபெற்றது.  இதில் கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி வாழ்த்துரை வழங்கினார். அமைப்பின் கவுரவ தலைவராக கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் நாகைமாலி, செயல் தலைவராக கே.தங்கமணி, தலைவராக மூர்த்தி, செயலாளராக இளையராஜா, பொருளாளராக அழகிரிசாமி உள்ளிட்டோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.வடிவேல், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பி னர்கள் எம்.குருசாமி, ஏ.எஸ்.பழனியம்மாள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.