tamilnadu

img

சிபிஎம், அனைத்துக் கட்சியினர் புகழஞ்சலி; மௌன ஊர்வலம்

மதுரை, நவ.15- சுதந்திரப் போராட்ட வீரரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்களில் ஒருவருமான தோழர்  என்.சங்கரய்யா தன்னுடைய 102-ஆவது வயதில் உடல்நல குறைவால் சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் புதனன்று (நவ.15) காலமானார். இதைத்தொடர்ந்து தோழர் சங்கரய்யாவின் மறை விற்கு தமிழ்நாடு முழுவதும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புகள் சார்பில் புகழஞ்சலி செலுத்தப்பட்டது.  இதன்படி, மதுரை மாநகர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் கட்ட பொம்மன் சிலை அருகில் இருந்து அனைத்துக் கட்சி தலை வர்கள் பங்கேற்ற கருப்பு கடி ஏந்தி மௌன ஊர்வலம் நடை பெற்றது. மௌன ஊர்வலம் நேதாஜி ரோட்டில் தொடங்கி ஜான்சி ராணி பூங்கா அருகில் நிறைவடைந்தது.  கட்சியின் மாநகர மாவட்டச் செயலாளர் மா.கணேசன் தலைமையில் தோழர் சங்கரய்யா புகழஞ்சலி கூட்டம்  நடைபெற்றது. கூட்டத்தில் திமுக முன்னாள் சட்டமன்ற  உறுப்பினர் வி.வேலுச்சாமி, முன்னாள் மேயர் பெ.குழந்தை வேலு, மதுரை மாநகராட்சி மேயர் இந்திராணி பொன்வசந்த,  காங்கிரஸ் நிர்வாகி வெங்கட்ராமன், திக மாநில பொரு ளாளர் செல்வம், மாவட்டச் செயலாளர் முருகானந்தம், முனைவர் நேரு, சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் இரா. விஜயராஜன், மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு மக்கள் ஒற்றுமை மேடை மாநில ஒருங்கி ணைப்பாளர் பேரா.அருணன், சிபிஐ மாவட்டச் செயலாளர் எம்.எஸ்.முருகன், மதிமுக சட்டமன்ற உறுப்பினர் மு.பூமி நாதன், மாவட்டச் செயலாளர் வி.முனியசாமி, மாநில ஒழுங்கு நடவடிக்கைக் குழு உறுப்பினர் எஸ்.மகபூப்ஜான், விசிக மாவட்டச் செயலாளர் கதிரவன், மமக மாவட்டச் செய லாளர் ஷேக் இப்ராஹிம், ஆதித்தமிழர் கட்சி மாநிலச் செய லாளர்களில் ஒருவரான குருசாமி, தமிழ் தேசிய முன்னணி  மாவட்டச் செயலாளர் கணேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தேனி

தேனியில்  ஸ்டேட் பாங்க் திடலிலிருந்து இரங்கல் பேரணி துவங்கியது. பின்னர் நேரு சிலை அருகே நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் தாலுகா செய லாளர் இ.தர்மர் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் சி.முருகன், பார்வர்டு பிளாக் மாநில பொதுச் செயலாளர் பி.வி.கதிரவன், திமுக நகர் செயலாளர் என்.சி. நாராயணபாண்டி, விசிக மண்டலச் செயலாளர் இரா.தமிழ் வாணன், திராவிடர் கழக மாவட்டச் செயலாளர் மணி கண்டன், சிபிஐ நகர் செயலாளர் ராஜ்குமார், சமூக நல்லிணக்க  பேரவை தலைவர் முகமது சபி ஆகியோர் பங்கேற்றனர். போடி தேவர் சிலை அருகே நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சியின் போடி தாலுகா செயலாளர் எஸ். செல்வம் தலைமை வகித்தார். மூத்த தலைவர் கே.ராஜப் பன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சி.முனீஸ்வரன், விவ சாயத் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் எல்.ஆர்.சங்கரசுப்பு, விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.பாண்டியன், திமுக நகர் செயலாளர் புருசோத்தமன், முன்னாள் நகர் மன்ற தலைவர் வி.ஆர்.பழனிராஜ், காங்கி ரஸ் நகர் தலைவர் முஸாக் மந்திரி, சிபிஐ நகர் செயலாளர்  சத்யராஜ், மதிமுக நகர் செயலாளர் ஆரோ செல்வன், விசிக  நகர் செயலாளர் மோகன், திக இளைஞரணி செயலாளர் சுருளி, வர்த்தகர்கள் சங்க தலைவர் வேல்முருகன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். சின்னமனூர் ஒன்றியக் குழுவின் சார்பில் கட்சி அலுவ லகத்திலிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சிலை அருகில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு காங்கிரஸ் நகரத் தலைவர் எஸ்.நைனார் முகமது தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி. வெங்கடேசன், ஒன்றியச் செயலாளர் கே.எஸ்.ஆறுமுகம், மாவட்ட  திமுக முன்னாள் அவைத்தலைவர் எஸ்.சன்னாசி,  வெல்பர் கட்சி தலைவர் சாதிக் பலர் கலந்து கொண்டனர்.

ஆண்டிபட்டியில் நடைபெற்ற இரங்கல் ஊர்வலத் திற்கு கட்சியின் ஒன்றியச் செயலாளர் மா.தங்கராசு தலைமை வகித்தார். திமுக ஒன்றியச் செயலாளர் ராஜாராம்,  சிபிஐ மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் பரமேஸ்வரன், சிபிஎம், காங்கிரஸ், திக நிர்வாகிகள் பேசினர். பெரியகுளம் நகரில் இரங்கல் ஊர்வலம் முக்கிய வீதி களின் வழியாக சென்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல்  கூட்டத்திற்கு மாவட்டக் குழு உறுப்பினர் எஸ்.ராமச்சந்திரன்  தலைமை வகித்தார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ்.சரவணக்குமார், மாவட்டச் செயற்குழு உறுப்பி னர்கள் எம்.ராமச்சந்திரன், எஸ்.வெண்மணி, தாலுகா செய லாளர் எம்.வி.முருகன், காங்கிரஸ் ஏ.சி.சிவபாலன், சிபிஐ மாவட்டச் செயற்குழு உறுப்பினர் காசி விஸ்வநாதன், விசிக  தாலுகா செயலாளர் ஆண்டி, திக செயலாளர் அன்பரசன், திமுக நிர்வாகிகள் சிவக்குமார், எம்.சேது ராமன் மற்றும் தாலுகா குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். கம்பத்தில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு கட்சி யின் ஏரியா செயலாளர் கே.ஆர்.லெனின் தலைமை வகித் தார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேனி மாவட்டச் செய லாளர் ஏ.வி.அண்ணாமலை, திமுக கொள்கை பரப்பு  துணைச் செயலாளர் இரா.பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் குரு.இளங்கோ, நகர் மன்ற தலைவர் வனிதா  நெப்போலியன், சிபிஐ தலைவர் பி.தங்கம், மதிமுக நகர் செயலாளர் பஷீர், முஸ்லீம் லீக் தலைவர் சாகுல் ஹமீது, திக நிர்வாகி செந்தில், எஸ்டிபிஐ நிர்வாகி தாவூத்,  பார்வர்டு பிளாக் நிர்வாகி மகேஸ்வரன், விவசாயி விடு தலை முன்னணி நிர்வாகி வசந்தன், மமக நிர்வாகி அப்பாஸ்  மந்திரி, நாம் தமிழர் கட்சி தலைவர் வடிவேல், நிர்வாகி அய்யப் பன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கடமலைக்குண்டுவில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் கண்ணன், கடமை ஒன்றியச் செயலாளர் போஸ், வணிகர்  சங்கத் துணைத் தலைவர் கோவிந்தன் உட்பட அனைத்துக்  கட்சியினர் பொதுமக்கள் கலந்து கொண்டு அஞ்சலி செலுத் தினர். 

திண்டுக்கல்
கட்சியின் வத்தலக்குண்டு ஒன்றியம் சார்பில் நடை பெற்ற இரங்கல் நிகழ்வில், ஒன்றியச் செயலாளர் தெய்வேந் திரன், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் ஒய்.குணசீலன், வின் சென்ட், சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். சாணார்பட்டி ஒன்றியம் கோபால்பட்டியில் நடை பெற்ற நிகழ்வில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் பிரபா கரன், மாவட்டக் குழு உறுப்பினர் பெருமாள், திமுக மாவட்டப்  பொருளாளர் விஜயன், ஒன்றியச் செயலாளர் தர்மராஜ், மதிமுக ஒன்றியச் செயலாளர் பாலகுரு, சிபிஎம் ஒன்றியக்  குழு உறுப்பினர்கள் பாப்பாத்தி, சின்னராஜ் சரவண கோபால், கருப்புசாமி உட்பட மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி தலைவர்கள் கலந்துகொண்டனர். பழனியில் உள்ள பட்டத்து விநாயகர் கோவிலில் இருந்து ஊர்வலமாக சென்று பேருந்து நிலையம் அருகே அஞ்சலி செலுத்தப்பட்டது. இதற்கு சிபிஎம் நகரச் செயலா ளர் கே.கந்தசாமி தலைமை வகித்தார். பழனி நகரமன்றத்  தலைவர் ஆர்.உமாமகேஸ்வரி, சிபிஎம் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் வி.ராஜமாணிக்கம், சிபிஐ நகரச் செயலாளர் கௌசல்யா, காங்கிரஸ் நகரத் தலைவர் முத்துவிஜயன், விசிக செய்தித் தொடர்பாளர் பொதுநிவளவன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ராமசாமி, கமலக்கண்ணன், மாவட்டக் குழு உறுப்பினர் பகத்சிங், பழனி ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர் மன்ற உறுப்பினர் சாகுல் ஹமீது உட்பட பலர் கலந்துகொண்டனர். இதேபோல், பழனி  27, 33 வார்டுகளில் இரங்கல் கூட்டம் நடைபெற்றது. ரெட்டியார்சத்திரம், கன்னிவாடியில் நடைபெற்ற இரங்கல் கூட்டங்களுக்கு கட்சியின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் வசந்தாமணி தலைமை வகித்தார். ஒன்றியச்  செயலாளர் சக்திவேல் மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர் கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

இராமநாதபுரம்
இராமநாதபுரம் அரண்மனை முன்பு நடைபெற்ற நிகழ்விற்கு கட்சியின் தாலுகா செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் குரு வேல், சிஐடியு மாவட்டச் செயலாளர் சிவாஜி, மாதர் சங்க மாவட்டச் செயலாளர் இ.கண்ணகி, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், விசிக சபீர், பஞ்சாலை  சங்க மாவட்டச் செயலாளர் வெங்கட சுப்பிரமணியன், சிஐடியு சந்தானம், அய்யாத்துரை, திமுக நகர்மன்ற துணைத் தலைவர் பிரவீன் தங்கம், சிறுபான்மை நலன் குழு மாவட்ட செயலாளர் என்.வெங்கடேஷ், தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்ட நிர்வாகி வான் தமிழ் இளம் பரிதி, முஸ்லிம் லீக் ஆசிக்உசேன், வருசை முகமது, சிபிஐ முன்னாள் மாவட்டச் செயலாளர் முருக பூபதி, களஞ்சியம், நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜூ ஆகி யோர் புகழஞ்சலி செலுத்தினர். சிஐடியு சார்பில் இராமநாதபுரத்தில் நடைபெற்ற புக ழஞ்சலி கூட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஏ.சந்தானம் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் எம்.சிவாஜி, நிர்வாகிகள் எம்.அய்யாதுரை, வி.பாஸ்கரன், எம்.காசி நாதன், வாசுதேவன், எல்ஐசி முத்துப்பாண்டி, வெங்கட சுப்பிரமணியன் உட்பட பலர் கலந்துகொண்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாரச்சந்தை வியாபாரி கள் சங்கத்தின் சார்பில் கமுதியில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்திற்கு வாரச்சந்தை வியாபாரிகள் சங்க தலைவர் எம்.ராமு, செயலாளர் ஏ.அண்ணா ரவி, பொருளாளர் ஆலடி  ஈஸ்வரன், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.முத்து விஜயன், தாலுகா செயலாளர் கண்ணதாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விருதுநகர்

விருதுநகர் கருமாதி மடம் முதல் தேசபந்து மைதானம்  வரை ஊர்வலம் நடைபெற்றது. பின்னர், நடைபெற்ற கூட்டத்திற்கு நகர் செயலாளர் எல்.முருகன் தலைமை வகித்தார்.  முன்னாள் நகர்மன்ற துணைத் தலைவர் பாலகிருஷ்ண சாமி, நகரத் தலைவர் நாகேந்திரன், மூத்த தலைவர் எஸ். பாலசுப்பிரமணியன், மூத்த நிர்வாகி சிவகுருநாதன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.வேலுச்சாமி, எம். முத்துக்குமார், வடக்கு ஒன்றிய செயலாளர் ஆர்.முத்து வேலு, மாவட்டக் குழு உறுப்பினர்கள் எம்.ஜெயபாரத், என்.உமாமகேஸ்வரி திமுக நகர் செயலாளர் தனபாலன், அதிமுக நகர் செயலாளர் முகமது நெய்னார், துணைச் செய லாளர் கண்ணன், ஆதித் தமிழர் கட்சியின் சுந்தரராஜன், விசிக சக்திவேல், மக்கள் நீதிமய்யம் கட்சியின்மாவட்டச் செயலாளர் காளிதாஸ், மதிமுக மாவட்ட அவைத் தலைவர் லட்சுமணன், சிபிஐ நகர் செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர். ஆலங்குளத்தில் சிபிஎம் ஒன்றிய செய லாளர் எம்.முனியசாமி தலைமையில் சிபிஐ ஒன்றிய செயலாளர் நடராஜன், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.குருசாமி ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். சிவகாசியில் சிபிஎம் நகர் செயலாளர் ஆர். சுரேஷ்குமார் தலைமையில் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர்கள் பி.என்.தேவா, கே.முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் எம்.சி.பாண்டியன், ஒன்றியச் செயலாளர் பி.பாலசுப்பிரமணியன், திமுக மாநகரச் செயலாளர் உதயசூரியன், மண்டலத் தலைவர் காளிராஜன், விசிக செல்வின்  ஏசுதாஸ், சிபிஐ மாவட்டப் பொருளாளர் சமுத்தி ரம், தாலுகா செயலாளர் ஜீவா, இந்திய தேசிய லீக் ஜஹாங்கீர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். சாத்தூரில் நகர் செயலாளர் பி.பெத்தராஜ் தலைமையில் நகர்மன்றத் தலைவர் குருசாமி,  துணைத் தலைவர் அசோக், கலை இலக்கிய பெருமன்ற மாநில பொதுச் செயலாளர் மருத்து வர் அறம், சிபிஐ மாவட்டச் செயற்குழு உறுப்பி னர் பழனிக்குமார், காங்கிரஸ் ஆறுமுகம், விசிக  சந்திரன், மதிமுக கணேஷ்குமார் ஆகியோர் இரங்கல் உரையாற்றினர். ஆர்.ஆர்.நகரில் தெற்கு ஒன்றியச் செய லாளர் பி.நேரு தலைமையில் சிபிஐ மாநிலக் குழு உறுப்பினர் வி.பாலமுருகன், திமுக ராம மூர்த்தி, விசிக லிங்கசாமி ஆகியோர் பேசினர்.  திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலையி லிருந்து சிபிஎம் ஒன்றியச் செயலாளர் சசிகுமார்  தலைமையில் இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் மாநிலக் குழு உறுப்பினர் மகாலட்சுமி, மாவட்டச்  செயலாளர் அர்ஜூணன், மாவட்டக் குழு உறுப்பி னர் திருமலை, சிபிஐ முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பொன்னுப்பாண்டியன், திமுக நகரச்  செயலாளர் அய்யாவு பாண்டியன், நகர மன்ற  துணைத் தலைவர் செல்வமணி, விசிக மாவட்டச் செயலாளர் பிரியதர்ஷினி, நகரச் செய லாளர் மிக்கேல் ராஜ், காங்கிரஸ் பெரியசாமி, பாண்டி செல்வம், மதிமுக நகரச் செயலாளர் முரளி, சிபிஐ நகரச் செயலாளர் மூர்த்தி, ஒன்றியச்  செயலாளர் பலவேசம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  

வத்திராயிருப்பில் நடைபெற்ற இரங்கல் கூட்டத்தில் சிபிஎம் ஒன்றிய செயலாளர் பெனரி  தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கள் ஜோதிலட்சுமி, ஜெயக்குமார் சிபிஐ முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, திமுக ஒன்றியச்  செயலாளர் முனியாண்டி, காங்கிரஸ் சுந்தரம், சிபிஐ கோவிந்தன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.  இராஜபாளையத்தில் பெரியார் சிலையி லிருந்து இரங்கல் ஊர்வலம் புறப்பட்டு ஜவகர் மைதானத்தில் முடிவடைந்தது. பின்னர் நடை பெற்ற இரங்கல் கூட்டத்திற்கு சிபிஎம் நகரச் செய லாளர் மாரியப்பன் தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் ராமர், கிழக்கு ஒன்றியச்  செயலாளர் முனியாண்டி, சிபிஐ மாவட்டச் செய லாளர் லிங்கம், திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராசா, அருண்மொழி, காங்கிரஸ்  மாவட்டத் தலைவர் ரெங்கசாமி, மதிமுக கொள்கை பரப்பு அணி நிர்வாகி பாண்டுரங்கன்,  விசிக தொகுதி செயலாளர் சரவணன், திக  மாவட்டத் தலைவர் சிவக்குமார், சிபிஐ மாவட்ட நிர்வாகி ரவி, சிபிஎம் மூத்த தோழர் கணேசன், நகர்மன்றத் தலைவர் பவித்ரா ஷியாம், நகர் மன்ற துணைத் தலைவர் கல்பனா குழந்தை வேல், திமுக நகர செயலாளர்கள் மணிகண்ட ராஜா, ராமமூர்த்தி, சிபிஐ நகரச் செயலாளர் விஜயன், மதிமுக நகரச் செயலாளர் மதியழகன்  திக மாநில நிர்வாகி திருப்பதி, காங்கிரஸ் நகர்மன்ற உறுப்பினர் சங்கர் கணேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.