tamilnadu

img

தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம், தோழர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா

சென்னை, நவ. 5 - நவம்பர் புரட்சி தினத்தன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி.ராமமூர்த்தி நினைவகத்தில் புதிதாக எழுப்பப்பட்டுள்ள தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் மற்றும் தோழர் பி.ராமமூர்த்தி சிலை திறப்பு விழா எழுச்சியுடன் நடைபெறுகிறது. இவ்விழாவிற்கான அழைப்பிதழை கட்சியின் முதுபெரும் தலைவர் என். சங்கரய்யாவிடம், மாநிலக்குழு உறுப்பி னர்கள் வெ.ராஜசேகரன், க.சுவாமி நாதன் ஆகியோர் நேரில் அளித்தனர். அழைப்பிதழை உற்சாகத்துடன் பெற்றுக் கொண்ட சங்கரய்யா, திறப்பு விழா நிகழ்ச்சிக்கு இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.  நவம்பர் 7 புரட்சி தினத்தையொட்டி தமிழ்நாடு முழுவதும் கட்சிக்கொடிகள் ஏற்றப்படுகின்றன. நவம்பர் புரட்சி தின சிறப்பு நிகழ்ச்சிகளும் நடைபெறு  கின்றன. இந்நிகழ்வுகளின் முத்தாய்ப்பாக மாநிலக்குழு அலுவலகத்தில் நடை பெறும் விழாவிற்கு மாநிலச் செயலா ளர் கே.பாலகிருஷ்ணன் தலைமை  ஏற்கிறார். கட்சியின் முதுபெரும் தலை வர் தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள அரங்கத்தை மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் திறந்து வைக்கிறார். தோழர் பி.ராமமூர்த்தி சிலையை மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் திறந்து  வைக்கிறார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் செங்கொடி ஏற்றுகிறார். அரசியல் தலைமைக்குழு உறுப்பி னர் ஜி.ராமகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்று பேசுகின்றனர்.