ரமல்லா, மார்ச்.7- பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்தியத் தூதரகத்தில் இந்திய தூதர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. பாலஸ்தீனத்துக்கான இந்திய தூதர் முகுல் ஆர்யா, பாலஸ்தீனத்தின் ரமல்லாவில் உள்ள இந்திய தூதர கத்தில் ஞாயிறன்று இறந்த நிலையில் கிடந்ததாகவும், இதுதொடர்பாக பாலஸ்தீனம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் பாலஸ்தீன வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வெளி யுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், ‘‘முகுல் ஆர்யாவின் மறைவு செய்தியை கேட்டு ஆழ்ந்த அதிர்ச்சியடைந்ததாகவும், அவர் ஒரு திறமையான அதிகாரியாக செயல் பட்டவர். அவரது குடும்பத்தினர் மற்றும் அன்புக்குரியவர்களுக்கு எனது இரங்கல்’’ என தெரிவித்துள்ளார். மேலும் அவரது உடலை இந்தி யாவுக்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகளை வெளியுறவுத்துறை அதி காரிகள் செய்து வருவதாக தெரி வித்துள்ளார். 2008 ஆம் ஆண்டு ஐஎஃப்எஸ் பிரிவைச் சேர்ந்த முகுல் ஆர்யா, ரஷ்யா, ஆப்கானிஸ்தான் நாடு களிலும் யுனெஸ்கோவிற்கான இந்தியாவின் நிரந்தரப் பிரதிநிதி யாகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.