மும்பை, ஜன.22- மும்பையில் 20 மாடி கட்ட டத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர் “மும்பை காந்தி மருத்துவ மனை எதிரே கமலா கட்டடத்தில் காலை 7 மணிக்கு தீ விபத்து ஏற் பட்டது. தரைத்தளம் மற்றும் 20 மாடி கொண்ட கட்டடத்தில் 18-வது மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள் ளது. இதையடுத்து, தீயணைப்பு வீரர்கள் மற்றும் காவல் துறை யினர் சம்பவ இடத்துக்கு விரைந்த னர். 13 தீயணைப்பு வாகனங்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடு பட்டுள்ளன. இதில் 15 பேர் காயம டைந்துள்ளனர். அவர்கள் அனை வரும் அருகேவுள்ள பாட்டியா மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் 15 பேர் பாட்டியா மருத்துவமனைக்கும், ஏழு பேர் நாயர் மருத்துவமனைக் கும் கொண்டு செல்லப்பட்டனர். 12 பேர் பொதுப் பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ மனையிலுள்ள மருத்துவர்கள் தெரிவித்தனர். மற்ற மூன்று பேருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சையளிக்கப்பட்டு வருவ தாகவும், அவர்களது உடல்நிலை மோசமாக உள்ளதாகவும் மருத்து வர்கள் கூறினர்.