தென் கொரியாவில் நடைபெற்ற சர்வதேச சிறார் கலைப்போட்டியில் வெற்றி பெற்ற செல்வி ஹான்னா தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திங்களன்று (செப்.4) தலைமைச் செயலகத்தில், சந்தித்து வாழ்த்துப் பெற்றார். அப்போது, முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து தான் வரைந்த ஒவியத்தை முதலமைச்சரிடம் வழங்கினார். அவரது தந்தை முனைவர் ஃபிரான்சிஸ் உள்ளிட்டோர் உடன் உள்ளனர்.