tamilnadu

img

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் இணைக்க கட்டாயப்படுத்துவதா? - ஆரூரான்

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க மின்வாரியம் அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து மின் துறை அமைச்சர் கூறுகையில், 100 யூனிட் இலவச மின்சாரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் ஆதார் இணைப்பது கட்டாயம் இல்லை என்றும் கூறினார். ஆனால் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது.  அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெற என அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் கேட்கப்படுகிறது. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சா ரத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு தெளிவு படுத்தியிருக்கிறது. ஆனாலும் பல மின்  இணைப்பு வைத்திருப்பவர்கள் மத்தியில் தங்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்கா தோ என்ற அச்சம் ஏற்பட்டுள்ளது. இதனால், பலரும் ஆதார் எண்ணை இணைக்க தயக்கம் காட்டி வருகின்றனர். இது, ஒரு பக்கம் இருக்க ஆதார் எண்ணை இணைத் தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் நடைமுறைகள் இணைய தளத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. 

இணைய பயன்பாடு பெருகிவிட்டதால் பெரும்பாலான நுகர்வோர்கள் இணைய தளம் மூலமாகவே மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். அது மட்டும் இன்றி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம்  மின் கட்டணத்தை செலுத்தி வருகின்றனர். தற்போது ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மின் வாரியம் அறிவுறுத்திய நிலையில், இணைய தளம் மூலமாகவோ பிற செயலிகள் மூல மாகவோ மின் கட்டணத்தை செலுத்த முயன் றாலும் ஆதார் எண்ணை இணைக்கும் பக்கத்திற்கு தானாகவே சென்று விடுவ தாக நுகர்வோர் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், மின் கட்டணத்தை செலுத்துவ தில் சிரமம் ஏற்பட்டுள்ளது.  மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்த பிறகு மட்டுமே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இது சரியான தல்ல. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். ஆதார் எண்ணை இணைக்காதவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படுகிறது.  ஆதார் எண்ணை இணைக்காதவர்க ளுக்கு மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள்  கூடுதலாக அவகாசம் வழங்குவதாக மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

அதேவேளையில், ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அபராத கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது எனவும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது. நேரடியாக மின் கட்டணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் தங்களது ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று மின் கட்டணம் செலுத்தும் போதே ஆதார் நகலை கொடுத்து ஆதார் எண்ணை இணை த்துக்கொள்ளலாம் என்றும், ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்துள்ளவர் கள் அனைத்து மின் இணைப்புகளுக்கும் ஒரே ஆதார் எண்ணை இணைக்கலாம் என்றும், வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்ணை அந்த வீட்டு மின் இணைப்புடன் இணைக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்பு டன் இணைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 3 லட்சம் பேர் ஆதார் எண்ணை இணைத்து உள்ளதாக மின்சார வாரியம் தெரிவித்துள்ளது. ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சா ரத்துக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது என மின்சார வாரியம் அறிவித்துள்ள போதிலும் ஒன்றுக்கும் மேற்பட்ட மின் இணைப்பு வைத்திருப்போர் அவை அனைத்துக்கும் தங்களது ஒரே ஆதார் எண்ணை பதிவு செய்வதால் ஏதேனும் சிக்கல் வருமோ என்ற அச்சத்தில் உள்ளனர். 

 இதன்மூலம் மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்ட ணத்தை செலுத்த முடியும் என்ற நிலையை  மின்வாரியம் ஏற்படுத்தி உள்ளது. மின் கட்டணம் செலுத்த நிர்ணயிக்கப்பட்டுள்ள கடைசி நாளில் இணையதளம் மூலம் கட்ட ணத்தை செலுத்த முயன்ற பலர் ஆதார் எண்ணை இணைக்காததால் கட்டணத்தை செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். மின்வாரியத்தின் இந்த திடீர் நடவடிக்கை நுகர்வோர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் கடந்த சில நாட்களாக இணைய தளத்தில் ஆதார் எண்ணை இணைக்க முடியாமல் இணையதளம் முடங்கி செர்வர் பிரச்சனை உள்ளது.  இப்போது மின் கட்டண உயர்வு செய்துள்ள நிலையில், பழைய நடைமுறையை கைவிட்டு மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் பணி நடை பெற்றால் மின் கட்டணம் குறைவாக வரும்  என எதிர்பார்ப்போடு மக்கள் உள்ளனர். மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டு அதன்மூலம் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்படும்போது மின் இணைப்பு துண்டிப்பு, மேலும் அபராத தொகை செலுத்த நேரிடு மோ என்ற அச்சத்திலும்  மக்கள் உள்ளனர். ஆதாரை இணைத்தால்தான் மின் கட்ட ணமே செலுத்த முடியும் என்ற கெடுபிடியை தளர்த்த வேண்டும் என்பது பொதுமக்க ளின் கோரிக்கையாக உள்ளது. இதை உட னடியாக அரசு பரிசீலித்து  நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.