தஞ்சாவூர், டிச.30- தமிழ்ப் பல்கலைக்கழ கத்தில், செம்மொழித் தமிழா ய்வு மத்திய நிறுவன நிதி நல்கையாக ரூ.1 கோடி முத லீட்டில் தொல்காப்பியர் இருக் கை நிறுவ புரிந்துணர்வு ஒப்ப ந்தம் செய்துகொள்ளப் பட்டது. இப்புரிந்துணர்வு ஒப்பந் தத்தின்படி, இவ்விருக்கை யில் தகைசால் பேராசிரியர் மற்றும் ஆய்வு உதவியாளர் நியமிக்கப்பட்டு, தொல் காப்பிய எழுத்ததிகாரமும் சங்க இலக்கியமும், தொல் காப்பியச் சொல்லதிகாரமும் சங்க இலக்கியமும், தொல் காப்பியப் பொருளதிகார மும் சங்க இலக்கியமும் என்ற தலைப்புகளிலும், தொல் காப்பியம் முழுமையும் பல்வேறு நிலைகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப் படவுள்ளன. இந்த ஒப்பந்தம் 01.01.2023 முதல் 31.12.2025 வரை மூன்று ஆண்டு காலத்திற்கானதாகும். தமிழ்ப் பல்கலைக் கழகப் பதிவாளர்(பொ) பேரா.சி.தியாகராஜன் மற்றும் செம்மொழித் தமிழா ய்வு மத்திய நிறுவன இயக்கு நர் பேரா.ரா.சந்திரசேகரன் ஆகியோர் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். ஒப்பந்தத்தின்படி தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் தொல்காப்பியர் இருக்கை நிறுவப்பட்டு, சிறந்த தகைசால் பேராசிரியர் நிய மிக்கப்பட்டு ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது. மேலும், ஆய்வு உதவி யாளர் ஒருவரும் நியமிக் கப்பட்டுத் தொல்காப்பியம் குறித்து முழுமையாக மூன்றாண்டுகளுக்கு ஆராயப் படவுள்ளது. இவ்விருக்கை யின் வாயிலாகத் தமிழ்ப் பேராசிரியர்களுக்கும் ஆய்வு மாணவர்களுக்கும் தொல்காப்பியம் குறித்த பயிலரங்குகளும், கருத்தரங்குகளும் இலக் கணத்தில் ஆழங்கால்பட்ட ஆய்வறிஞர்களைக் கொண்டு நடத்தவும் திட்ட மிடப்பட்டுள்ளது. ஆண்டிற்கு மூன்று முறை இப்பயிலரங்கம் நடத்தப்பெறும் எனவும், பயி லரங்கிற்குத் தெரிவு செய் யப்பட உள்ளவர்களுக்கு முறையான இலக்கணப் பயிற்சி அளிக்கப்படும் என வும் தெரிவிக்கப்பட்டுள்ளது.