tamilnadu

img

ரூ.400 கோடி முதலீட்டில் 2000 பேருக்கு வேலைவாய்ப்பு

சென்னை, செப்.12- 2030-ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு உயர்த்த வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் நிர்ணயித்துள்ள இலக்கை விரைவில் அடைவதற்காக, அதிக முதலீடுகளை ஈர்க்க, தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில், தமிழ்நாடு அரசின் தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அம்முயற்சிகளுக்கு மகுடம் சூட்டும் வகையில், 2024-ஆம் ஆண்டு ஜனவரி 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில், சென்னை யில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை சிறப்பான முறையில் நடத்த உரிய நடவடிக் கைகளை தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வருகிறது. தரமான கண் சிகிச்சை எளிதாகவும், குறைந்த கட்டணத்தில் வழங்குவதை நோக்க மாகவும் கொண்டுள்ள மேக்சி விஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடல்ஸ் பிரைவேட் லிமிடெட் தமிழ்நாடு, தெலுங்கானா, குஜராத், ஆந்திரப்பிரதேசம் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களில் 42 பன்நோக்கு சிறப்பு கண் மருத்துவமனைகளை அமைத்துள்ள பெரிய வலையமைப்பு கொண்ட குழுமம். இக்குழுமம், தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண் சிகிச்சை மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இந்த குழுமம், ரூ. 400 கோடி முதலீடு மற்றும் 2000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் நிலை 2 மற்றும் நிலை 3 நகரங்களில் 100 கண்  சிகிச்சை மையங்கள் அமைக்கும் திட்டத்தை  செயல்படுத்துவதற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலை யில் செவ்வாயன்று (செப்.12) தலைமைச் செயலகத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.