தூத்துக்குடி, ஆக. 26- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தாயும், மகளும் 4வயது சிறுவனுடன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பள்ளிபத்து கிராமத்தைச் சேர்ந்தவர் சோமு மனைவி மேரி (53), இவர் அப்பகுதியில் 13 சென்ட் நிலத்தில் வீடு கட்டி தனது குடும்பத்தினருடன் குடியிருந்து வருகிறார். அந்த நிலத்திற்கு பட்டா கேட்டு திருச்செந்தூர் தாலுகா அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் அந்த இடம் நத்தம் புறம்போக்கு நிலத்தில் இருப்பதாகக் கூறி அதிகாரிகள் பட்டா வழங்கவில்லையாம். இதையடுத்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இந்நிலையில், திங்களன்று காலை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மேரி, அவரது மகள் பபிசுதா, அவரது கணவர் மகேஸ், அவர்களின் நான்கரை வயது குழந்தை ஆகி யோருடன் வந்துள்ளார். அப்போது மேரி, தான் பையில் மறைத்து வைத்திருந்த 2 பாட்டில்களிலிருந்து மண்ணெண்ணெயை தனது உடலிலும், மகள், மற்றும் குழந்தையின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றுள் ளார். இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டி ருந்த சிப்காட் போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துவேல் தலை மையிலான போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி காப்பாற் றினர். பின்னர் அவர்களிடம் விசாரணை நடத்தினர்.