tamilnadu

img

சீத்தாராம் யெச்சூரி சிந்தனைகள்

ஆர்.எஸ்.எஸ்.-சின் புதிய விதமான,  பரந்த மற்றும் ஊடுருவக்கூடிய பொது பிம்பத்தை உருவாக்க வேண்டும் என்ற முயற்சி சூழ்ச்சிகரமான செயலாகும். மோடி அரசில் பெரும்பாலான இந்துத்துவ கொள்கைகள் செயல்படுத்தப்பட்டுள்ளன. இது முஸ்லிம்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட சமூகங்களை தாக்கி, வன்முறை, வெறுப்பு மற்றும் பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத்,  வன்முறை குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும் என்று கூறிய போதிலும், இந்து மதத்தின் பேரில் நடக்கும் குற்றங்களுக்கு எதிராக குரல் கொடுப்பதில்லை. இது அவரின் இரட்டை நாக்கு பேச்சு ஆகும்.