இவ்வாண்டு செப்டம்பர் மாதம் வரை மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப் பிய கண்டத்திற்கு சென்ற 2,500 க்கும் மேற் பட்ட புலம்பெயர் ஆப்பிரிக்க மக்கள் இறந் துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ள னர் என ஐ.நா அகதிகள் அமைப்பின் ஆணையர் மெனிக்டிவேலா தெரிவித்துள்ளார். தங்கள் குழந்தைகளையும் உயிரையும் காப்பாற்றிக்கொள்ள எல்லை கடந்து சிறிய, அல்லது போதிய வசதிகள் இல்லாத நெரிச லான படகுகளில் செல்லும்போது விபத்து ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் உயிரி ழந்துள்ளனர். உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரிக்கும் போதிலும் ஐரோப்பாவிற்குள் செல்லும் புலம்பெயர்ந்தோரின் எண் ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கிறது. 2023 செப்டம்பர் வரை 1,86,000 பேர் மத்திய தரைக்கடல் வழியாக ஐரோப்பா சென்றுள் ளனர். இவர்களில் 83 சதவீதமானோர் (1,30,000) இத்தாலியிலும் பிறர் கிரீஸ், ஸ்பெயின் உள்ளிட்ட கடலோர ஐரோப் பிய நாடுகளிலும் தஞ்சம் புகுந்துள்ளனர். கடந்த ஆண்டை விட 260 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் தற்போது வரை அகதிகளாக வெளியேறியுள்ளனர். மேற்குலக நாடுகள் ஆப்பிரிக்க நாடு களில் ஏற்படுத்திய போரால் உருவான தீவிர வறுமை,பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட காரணங்களால் அதிகளவிலான துணை சகாரா ஆப்பிரிக்க மக்கள் மத்திய தரைக்கடல் மற்றும் சகாரா பாலைவனங் களின் வழியாக ஐரோப்பிய நாடுகளுக்குள் அகதிகளாகச் செல்லும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளனர். இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பின் தகவல்படி இந்த ஆண்டு ஜனவரி முதல் செப்டம்பர் வரை மத்திய தரைக் கடலில் இறந்தவர்கள் அல்லது காணாமல் போனவர்களின் மொத்த எண் ணிக்கை 2,778 ஆகும். இது ஐநா வழங்கிய எண்ணிக்கையை விட சற்று அதிகமாகும். மேலும் 2014 முதல் 28,105 க்கும்மேற்பட்ட புலம்பெயர் மக்கள் இந்த கடலை கடக்கும் போது இறந்துள்ளனர் அல்லது காணாமல் போயுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது.
ஐரோப்பாவின் மனிதநேயமற்ற செயல்
ஐரோப்பிய ஒன்றியம் புலம்பெயர்ந் தோரின் வருகையைத் தடுக்க கடுமையான மற்றும் பல அடுக்கு எல்லைக் கட்டுப் பாட்டுக் கொள்கையை உருவாக்கியுள்ளது. மேலும் ஐரோப்பிய நாடுகளின் கட லோர காவல் படையினர் புலம்பெயர் மக்களின் படகுகளை சேதப்படுத்துவது, கடற்கரையை அடைந்த புலம் பெயர் மக்களை வலுக்கட்டாயமாக மீண்டும் கட லுக்குள் திருப்பி அனுப்புவது, திறந்த வெளிச் சிறைகளில் அடைத்து துன்புறுத்து வது, நிவாரணம் மற்றும் மீட்புப் பணிக ளில் ஈடுபடும் தன்னார்வ தொண்டு நிறு வனங்களை தடுப்பது என மனிதாபிமான மற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். லிபியாவில் புலம்பெயர்ந்தோர் மற்றும் அகதிகளை கடத்தியது மற்றும் சட்டவிரோ தமாக அடைத்து வைத்தது தொடர்பான போர்க்குற்றங்களில் ஐரோப்பிய ஒன்றி யம் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடு பட்டதாக ஐ.நா சபை குற்றம் சாட்டி யது குறிப்பிடத்தக்கது.