tamilnadu

மின் கட்டண உயர்வை திரும்பப் பெற வேண்டும்

சென்னை, ஜூலை 16 - மின்சாரக் கட்டண உயர்வைத் திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின் கணக்கீட்டை அமல்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது. இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநில செயற்குழு கூட்டம் இன்று  (16.07.2024) சென்னையில் மாநில  செயற்குழு உறுப்பினர் கே. பாலபாரதி தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் அர சியல் தலைமைக்குழு உறுப்பி னர்கள் பிரகாஷ் காரத், ஜி. ராம கிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பினர்கள் பி. சம்பத், உ.வாசுகி, பெ. சண்முகம் மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.  இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

தனியார் கொள்ளைக்கு மாற்றும் ஒன்றிய அரசின் மின்சார சட்டம்

தமிழ்நாட்டில் மீண்டும் 4.83  சதவிகிதம் கூடுதல் மின் கட்டணம்  மக்கள் தலையில் சுமத்தப் பட்டுள்ளது. மக்கள் தலையில் பேரி டியாக இறங்கியுள்ள இந்த அறி விப்பை உடனடியாக திரும்பப் பெறுவதுடன், மாதாந்திர மின்  கட்டண கணக்கீட்டை நடைமுறை க்கு கொண்டு வர வேண்டும் என்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்துகிறது. ஒன்றிய அரசின் மின்சாரச் சட்டம் மற்றும் உதய் மின் திட்டம் ஆகியவை மின்சார வாரியத்தின் சேவை நோக்கத்தை முற்றிலு மாக அழித்து, தனியார் கொள்ளை க்கு மாற்றும் திட்டம் கொண்ட வை. மின் வாரியத்தின் கடன் தேவைகளை நிறைவேற்று வதற்கு, பல்வேறு நிபந்தனை களை ஏற்க வேண்டுமென வெளிப் படையான நிர்ப்பந்தங்களை ஒன்றிய அரசு மேற்கொள்கிறது. இப்போதும், ஆர்.டி.எஸ்.எஸ். திட்டத்தில் ஒன்றிய அரசின் நிதியைப் பெறுவதற்கு கட்டண உயர்வு கட்டாயம் என்பதை மின் வாரியம் தனது விளக்கத்தில் முன்வைத்துள்ளது. 

வருவாயைக் காட்டிலும்  அதிகமான வட்டித் தொகை

புதிய மின் உற்பத்தித் திட்டங் களை அரசே செயல்படுத்தி குறைந்த கட்டணத்தில் மின் விநியோ கம் செய்வதுதான் தமிழ்நாட்டு க்கு தேவையான மின் கொள்கை யாகும். ஆனால் தனியாரிடம் அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கு வது, அதனால் கூடுதல் கட்டணம் விதிப்பது அல்லது கடன் வாங்கு வதன் மூலம் அந்த நெருக்கடியை சமாளிப்பது என்ற முறையில் மின் வாரியம் தமிழக மக்களுக்கு சுமையை ஏற்றுகிறது. உதாரணமாக, 2022-23 ஆம்  ஆண்டில் மின் கட்டண உயர்வால்  7 மாதங்களில் மின்வாரியம் ஈட்டிய தொகை ரூ. 12 ஆயிரத்து 550 கோடி ஆகும். அதே காலகட்டத்தில் மின்வாரியம் தனது கடனுக்கான வட்டியாக ரூ. 13 ஆயிரத்து 450 கோடி செலுத்தியுள்ளது. செலவுகளை பார்க்கும்போது மொத்த வருமானம் ரூ. 82 ஆயிரத்து 399 கோடியில், சுமார் ரூ. 51 ஆயிரம் கோடியை மின்சாரத்தை வாங்குவதற்கே செலவிட்டிருப்பதாக தெரிய வருகிறது. மக்களிடமிருந்து வசூ லிக்கப்படும் கூடுதல் தொகை யெல்லாம் தனியாருக்கு லாபத்தை கொட்டிக் குவிக்கவே உதவும்; மின்வாரிய வளர்ச்சிக்குஉதவாது.

தனியார் சுரண்டலுக்கு தள்ளும் பாஜக ஆட்சியின் அழுத்தம்

இது தவிர, பாஜக ஆட்சியில் வரும் மறைமுக அழுத்தங்கள், கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் அதானியின் தரம் குறைந்த நிலக்கரியை அதிக விலையில் நம் தலையில் கட்டியதும், அதனால் ஏற்பட்ட கூடுதல் செலவினங்களை வட்டியோடு சுமக்க வேண்டிய நிர்ப்பந்தம் மின்வாரியத்திற்கு ஏற்பட்டதையும் அண்மை செய்தி கள் அம்பலப்படுத்தின.  இதே காலகட்டத்தில், தமிழ்நாடு மின்சார வாரியத்தை கம்பெனிகளாக பிரிப்பது, ஸ்மார்ட்  மீட்டர்கள் பொருத்துவது ஆகிய கொள்கை முடிவுகளை தமிழ்நாடு அரசு எடுத்துள்ளது. இந்த முடிவு களும் வரும் ஆண்டுகளில் கூடுத லான மின்கட்டண உயர்வுக்கும் தனியார் சுரண்டலுக்கும் வழிவகுக் கும். தனியார்மயப் பாதையில் தொடர்ந்து பயணித்துக் கொண்டு,  கட்டணத்தை உயர்த்தி அறிவிப்பது மேலும் ரூ. 6 ஆயிரம் கோடி அள வுக்கான சுமைகளை தமிழ்நாடு மக் களின் மீது திணிப்பது சரியல்ல. 

என்ன தான் விளக்கினாலும் சுமை மக்களுக்கே!

சுமார் 1 கோடி மின் இணைப்பு களுக்கு கட்டண உயர்வு இருக் காது என்றாலும், வீட்டு இணைப்பு களுக்கு சில பைசாக்கள் என்ற அளவில்தான் உயர்வு  இருக்கும் என மின்சார வாரியம் சில விளக்கங்களை முன்வைத்துள்ளதை பார்க்கும்பொழுது, இரு மாதங்களுக்கு 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு கட்டண உயர்வு பெரும் சுமையாக மாறும் என்பதை உணர முடிகிறது. வணிக இணைப்பாக இருந்தாலும், சிறு/குறு தொழில்களுக்கான இணைப்பாக இருந்தாலும் அந்தச் சுமையை ஏதோ ஒரு வகையில் மக்களேதான் சுமக்க நேரிடும் என்பதையும், சிறு உற்பத்திப் பொருட்களின் விலையில் இந்தச் சுமை ஏற்றப்பட்டால் சந்தையில் போட்டிச் சூழலில் தமிழ்நாட்டு நிறுவனங்கள் பின்தங்கும் என்பதையும் தமிழ்நாடு அரசு கணக்கிலெடுக்க வேண்டும்.

மாதந்தோறும் மின்கட்டண வசூல்!

ஒன்றிய அரசின் தனியார்மய சூழ்ச்சித்  திட்டத்தைப் பின்னுக்குத் தள்ளுவதுடன், கடந்த காலங்களில் ஊழல் முறைகேடு களால் ஏற்றப்பட்ட கடன் சுமையை, அதற்கு காரணமான அதானி உள்ளிட்ட நிறுவனங்களிடம் இருந்தே அபராதத்துடன் வசூலித்து அரசு கருவூலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்றும், இப்போது அறிவிக்கப்பட்டுள்ள மின் கட்டண உயர்வை திரும்பப் பெறுவதுடன் மாதாந்திர மின் கணக்கீட்டை அமலாக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டுள்ளது.