tamilnadu

img

பொதுத்துறை நிறுவன தணிக்கையை தனியாரிடம் ஒப்படைக்கும் மோடி அரசு

பொதுத்துறை நிறுவன தணிக்கையை தனியாரிடம் ஒப்படைக்கும் மோடி அரசு 

சு. வெங்கடேசன் எம்.பி. கண்டனம்; ஜனாதிபதிக்கு கடிதம்

புதுதில்லி, ஜூன் 4 - பொதுத்துறை மற்றும் உள்ளாட்சித் துறைகளை தணிக்கை செய்ய தனியார் தணிக்கை நிறு வனங்கள் விண்ணப்பிக்கலாம் என சிஏஜி விடுத்துள்ள அழைப்புக்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் கண்டனம் தெரிவித்துள்ளார். அரசமைப்புச் சட்டத்துக்கு எதி ரான இந்த அறிவிப்பை திரும்பப்பெற வேண்டும் என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவுக்கு அவர் கடிதம்  எழுதியுள்ளார். அதிர்ச்சியளிக்கும் டெண்டர் அந்த கடிதத்தில், சு. வெங்க டேசன் எம்.பி. மேலும் கூறியிருப்ப தாவது: “அண்மையில் சி.ஏ.ஜி. வெளி யிட்டுள்ள ஒரு டெண்டர் அதிர்ச்சி யளிக்கிறது. அது பொதுத்துறை, உள்ளாட்சித் துறைத் தணிக்கையை செய்வதற்கு சி.ஏ. நிறுவனங்களை விண்ணப்பிக்குமாறு கோரியுள்ளது. கணக்குத் தணிக்கை ஊழியர்களுடன் சேர்ந்து இந்த சி.ஏ. நிறுவனங்கள் தணிக்கை செய்வார்களாம். இந்தியாவின் உயர்ந்த தணிக்கை அதிகாரியான சி.ஏ.ஜி. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தால் உரு வாக்கப்பட்டவர்.  நாடாளுமன்றத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டவர். அவரது பணி அரசுடைமையான பொதுத்துறை, தன்னாட்சி பெற்ற நிறுவனங்கள், உள்ளாட்சி நிறுவனங்களை தணிக்கை செய்வது ஆகும். சார்ட்டர்ட் அக்கவுண்டண்ட் (சி.ஏ) செய்யும் தணிக்கையும், சிஏஜி-இன் தணிக்கையும் ஒன்றல்ல. இந்த நிறுவனங்களைத் தணிக்கை செய்வதில் சிஏஜி துறை  அதிகாரிகளின் தனித்திறன் நிபுணத்துவமுடையது. அதேபோல் உள்ளாட்சி தணிக்கையும் சிஏஜியின் தணிக்கை வரம்புக்கு உட்பட்டதேயாகும். சுருக்க மாக சிஏஜி என்பவரும், அவரது கணக்குத் தணிக்கைத் துறையும், இந்திய மக்களின் நிதியின் பாது காவலர்கள் என்றால் மிகையாகாது. அரசியலமைப்பை மீறும் ஒன்றிய பாஜக அரசு இந்நிலையில் பல்லாயிரக் கணக்கான கோடி ரூபாய்கள் புரளும் இந்தத் தணிக்கையைத் தனி யார் சி.ஏ. நிறுவனங்கள் மேற் கொள்ள அழைப்பது என்பது சிஏஜி யிடம் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்துள்ள கடமையை மீறுவ தாகும்.  மேலும் இந்த நிறுவனங்களிடம் இருக்கும் ரகசியமான விவரங்களும் தனியார் கைகளுக்குப் போய்ச் சேரும் ஆபத்தும் உண்டு. சிஏஜி எந்த அரசியல் தலை யீடும் இல்லாமல் பணிபுரிய வேண்டும் என்பதால் தான் அண்ணல் அம்பேத் கார் இயற்றிய அரசியலமைப்புச் சட்டம் அவரைத் தனி உரிமையுடன் வைத்தது. அந்த அரசியலமைப்புச் சட்ட விதிகளுக்கு மாறாக சிஏஜியே தனியாரை துணைக்கு அழைப்பது ஆபத்தானது. எனவே, சிஏஜி உடனடியாக இந்த நடவடிக்கையைக் கைவிட வேண்டும். இந்தத் துறையின் தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். அப்போதுதான் மக்க ளது நிதியைக் காப்பாற்ற முடி யும். எனவே, தனியார் சி.ஏ. நிறு வனங்களுக்கு அழைப்பு விடுத்து வெளியிட்டிருக்கும் அறிவிக்கையை சிஏஜி உடனடியாகத் திரும்பப் பெற அறிவுறுத்த வேண்டும்.” இவ்வாறு சு. வெங்கடேசன் எம்.பி. குறிப்பிட்டுள்ளார்.