குடியரசுத் தலைவரை முன்னே நிறுத்தி உச்சநீதிமன்றத்தோடு மோதும் மோடி அரசு!
மாநில அரசின் மசோதாக்கள் மீது முடிவெடுக்க காலவரம்பு கூடாதாம்!
புதுதில்லி, மே 15 - மாநில சட்டமன்றங்களில் நிறை வேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு தமக்கு காலக்கெடு விதிக்க முடியுமா, என்பது உட்பட 14 கேள்விகளை முன்வைத்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உச்ச நீதிமன்ற த்திடம் விளக்கம் கேட்டுள்ளார். ஆளுநர்கள் மூலமாக மாநில அரசுகளை மிரட்டி முடக்கும் முயற்சியில் ஈடுபட்டு வரும் ஒன்றிய பாஜக அரசு, தற்போது குடியரசுத் தலைவரை உச்ச நீதி மன்றத்தோடு மோதவிடும் வேலை யில் இறங்கியுள்ளது. மாநில அரசுகளின் மசோதாக் கள் மீது முடிவெடுக்கும் விவ காரத்தில் ஆளுநர்கள் மற்றும் குடி யரசுத் தலைவருக்கு காலக்கெடு நிர்ணயித்து, உச்சநீதிமன்றம் ஏப்ரல் 8 அன்று முக்கியமான தீர்ப்பை வழங்கியிருந்தது. சட்டப்பிரிவு 200-ன் கீழ் ஆளுநருக்கு அனுப்பப்படும் மசோதாக்களுக்கு 3 மாதத் திற்குள் ஒப்புதல் வேண்டும்; ஒப்புதல் அளிக்கப் போவதில்லை என்றால், அதனை ஒரு மாதத் திற்கு உள்ளாகவே சரியான கார ணங்களுடன் மாநில அரசு களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியது. அதேபோல ஆளுநர்கள் அனுப்பி வைக்கும் மசோதாக்களுக்கு குடியரசுத் தலைவரும் 3 மாதத் திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தது. நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, வழங்கிய இந்த தீர்ப்பு, இது மாநில உரிமைகள் மற்றும் கூட்டாட்சி தத்துவம் தொடர் பான வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பு என்று நாடு தழுவிய அளவில் அரசியல் கட்சித் தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்தனர். ஆனால், அப்போதே குடியர சுத் துணைத்தலைவர் ஜகதீப் தன் கர் மூலம், உச்ச நீதிமன்றத்தை மிரட்டும் நடவடிக்கையில் ஒன்றிய பாஜக அரசு இறங்கியது. “குடியரசுத் தலைவருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியுமா? குடியரசுத் தலைவரை நீதிமன்றம் இவ்வாறு வழிநடத்தும் முறை யை அனுமதிக்க முடியாது. தேர்ந் தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள்தான், அரசியலமைப்பு என்னவாக இருக்கும் என்பதற்கு இறுதி எஜ மானர்களாக இருப்பார்கள். அவர் களுக்கு மேல் எந்த அதிகார மும் இருக்க முடியாது. அரசி யலமைப்பில் நாடாளுமன்றம் தான் உச்சபட்ச அதிகாரம். நாடாளுமன்றத்தைத் தாண்டி எந்த அதிகாரமும் இல்லை” என்று பொங்கியிருந்தார். மாநில சட்டமன்றங்களும் மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்டவை தான். அந்தசட்டமன்றங்களை விட, நியமன பதவி யில் உள்ள ஆளுநர் மட்டும் அதிகாரம் மிக்கவராக இருப்பாரா? மசோதாக் களை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் - மக்களின் ஆணைக்கு எதிராக ஒப்புதல் வழங்காமல் கிடப்பில் போட்டு வைக்க முடியுமா? என்ற கேள்விக்கு எந்தப் பதிலும் கூறவில்லை. இந்தப் பின்னணியில் தான், குடி யரசுத் தலைவர் திரௌபதி முர்முவும், மாநில சட்டமன்றங்களில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் குறித்து முடிவு எடுப்பதற்கு தமக்கு காலக்கெடு விதிக்க முடியுமா, என்பது உட்பட 14 கேள்விகளை முன்வைத்து, உச்ச நீதிமன்றத்திடம் விளக்கம் கேட்டுள்ளார். குறிப்பாக, பிரிவு 200-இன் கீழ் ஒரு மசோதா ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும்போது, அவருக்கு முன் உள்ள அரசியலமைப்பு விருப்பங் கள் என்னென்ன; ஒரு மசோதா ஆளு நருக்கு அனுப்பி வைக்கப்படும் போது, அவருக்கு இருக்கும் அரசியலமைப்பு விருப்பங்களையும் செயல்படுத்தும்போது, அமைச்ச ரவை வழங்கும் ஆலோசனைக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா; பிரிவு 200-இன் கீழ் ஆளுநரின் அரசியலமைப்பு விருப்புரிமை நீதித்துறை மறு ஆய்வுக்கு உட் பட்டதா; அரசியலமைப்பு ரீதியாக காலக்கெடு இல்லாவிட்டாலும், சட்டப்பிரிவு 200-இன் கீழ் உள்ள அனைத்து அதிகாரங்களையும் ஆளுநர் பயன்படுத்துவதற்காக, நீதி மன்றங்கள் காலக்கெடுவை விதிக்க முடியுமா மற்றும் பரிந்துரைக்க முடியுமா; பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரால் அரசியலமைப்பு விருப்புரிமையைப் பயன்படுத்துவது மறுஆய்வுக்கு உட்பட்டதா?; பிரிவு 201-இன் கீழ் குடியரசுத் தலைவரின் விருப்புரிமையைப் பயன்படுத்துவதற்கு நீதிமன்ற உத்தரவுகள் மூலம் காலக்கெடுவை விதிக்க முடியுமா? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார். குடியரசுத் தலைவரின் இந்த கடிதத்தைத் தொடர்ந்து, அவருக்கு விளக்கங்கள் அளிக்கும் வகையில், வெள்ளிக்கிழமையன்று (மே 16) தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு அமைக்கப்பட உள்ளது.