சென்னை,டிச.16- சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதிக்கு 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட் டுள்ளது. தமிழக சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுக்கு ஒவ்வொரு வருடமும் 3 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. இந்த தொகையில் எம்.எல்.ஏ.-க்கள் தங்களுடைய தொகுதி யில் கட்டமைப்பு வசதிகளை செயல்படுத்துவார்கள். நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு காரணமாக 2021-2022 நிதியாண் டுக்கான மேம்பாட்டு நிதி இதுவரை ஒதுக்கப்ப டாமல் இருந்தது. ஆட்சி மாற்றத்திற்கு இந்த தொகையை ஒதுக்கீடு செய்யுமாறு எதிர்க்கட்சிகள் வழியுறுத்தி வந்தன. இந்த நிலையில் 352 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள் ளது. இந்த மொத்த தொகை யில் 50 விழுக்காடாகும்.