நெல்லை,நவ.4- ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என திமுக கூட்டணி எம்.பிக்கள் விடுத்துள்ள கோரிக்கைக்கு, சிறுபான்மையினர் ஆதரவு அளிப்பதாக, தமிழக சிறுபான்மை ஆணையத் தலைவர் எஸ்.பீட்டர் அல்போன்ஸ் தெரிவித்தார். திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தி லுள்ள சிறுபான்மை மக்கள் மத்தியில் அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தும் வகையில் தமிழக ஆளுநர் பேசி வரு கிறார். நாடு மதம் சார்ந்து இருக்க வேண்டும் என்று கூறுகிறார். அவரது பேச்சு அரசியல் சாசன அடிப் படைக் கூறுகளுக்கு எதிரா னது. ஆளுநரை திரும்பப் பெற வேண்டும் என்று திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்.பிக்கள் கையெழுத்திட்டு, குடியரசு தலைவரிடம் மனு அளிக்கும் முடிவை சிறு பான்மை சமூகம் ஒட்டு மொத்தமாக ஆதரிக்கிறது. தமிழக அரசின் செயல் பாடுகளையும், நிர்வாகத் தையும் நிலைகுலைய வைக்கும் வகையில், எதிர்க்கட்சித் தலைவர் போல் ஆளுநர் பேசிவருவது தமிழகத்தின் முன்னேற் றத்தை பாதிக்கும். இவ்வாறு அவர் தெரி வித்தார்.