tamilnadu

img

சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா: அமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப். 22- தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 18 ஆம் தேதி அனைத்து மாவட் டங்களிலும் சிறுபான்மை யினர் உரிமைகள் தின  விழா மாவட்ட ஆட்சியர்  தலைமை யில் கொண்டாடப்பட்டு வரு வதைப் போன்று மாநில அள விலும் கொண்டாடப்படும் என்று அமைச்சர் செஞ்சி கே. எஸ்.மஸ்தான் அறிவித்தார். சட்டப்பேரவையில் வெள்ளியன்று சிறுபான்மை யினர் நல துறை மானியக் கோரிக்கை மீது விவாதம் நடைபெற்றது. முன்னதாக கொள்கை விளக்க குறிப்பு தாக்கல் செய்து பேசிய அமைச்சர் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதில் கல்வி வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நலன்களில் அவர்களுக்குரிய பங்கீடு கிடைப்பதை உறுதி செய்வ தில் தமிழ்நாடு முன்னோ டியாக விளங்குகிறது என்றும்  மதநல்லிணக்கத்தை உருவாக்க அரசு உறுதி யாக இருக்கிறது என்றும் தெரிவித்தார். தேனி கிருஷ்ணகிரி விழுப்புரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் தலா ஒரு  முஸ்லீம் மகளிர் உதவும் சங்கங்களை துவக்க அரசு  அரசாணை வெளியிட் டுள்ளது. இந்த சங்கத்தின் மூலம் ஆதரவற்ற வயதான முஸ்லிம் விதவைகள் மற்றும் மிகவும் ஏழ்மை நிலையில் வாழும் முஸ்லிம் மகளிர் ஆகியோருக்கு உதவி செய்யும் வகை யில் கையில் குழு வேலைப் பாடுகள், காலணிகள் கைவினைப் பொருட்கள் தயாரிப்பதற்கு பயிற்சி கொடுக்கப்படும் என்றும் அறிவித்தார். பின்னர் புதிய அறிவிப்பு களை வெளியிட்ட அமைச் சர், கிராமப்புற சிறுபான் மையின மாணவியர்கள் இடைநிற்றல் இன்றி தொடர்ந்து கல்வி பயில 3 முதல் ஆறாம் வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப் படும் என்று கூறினார்.