சென்னை, டிச. 20 - இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் அண்மையில் பொறுப்பேற்றார். இந்நிலையில் இந்திய கம்யூனிச இயக்கத்தின் மூத்த தலைவரும், விடுதலைப் போராட்ட வீரருமான என்.சங்கரய்யாவை செவ்வாயன்று (டிச.20) அவரது இல்லத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு ‘இஎம்எஸ் நம்பூதிபாட் வரலாறு-சமூகம்-நிலஉறவுகள்’ எனும் நூலை என் சங்கரய்யா வழங்கினார். மேலும், “விளையாட்டுத் துறையில் தமிழகத்தை இந்தியாவின் தலைசிறந்த மாநிலமாக மாற்றுங்கள். இந்தியாவின் சார்பில் தமிழகத்திலிருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் பதக்கங் களை வெல்லும் வகையில் பயிற்சி அளி யுங்கள். அனைத்து மாவட்டங்களிலும் விளையாட்டை மேம்படுத்துங்கள். நீங்கள் நிர்வகிக்கும் அனைத்து துறைகளிலும் வெற்றிகரமாக செயல்பட வாழ்த்துக்கள்” என்று என்.சங்கரய்யா வாழ்த்து தெரி வித்தார். இந்நிகழ்வின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன், பல்லாவரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இ.கருணா நிதி, சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், பல்லாவரம் பகுதிச் செயலாளர் எம்.சி.பிரபாகரன், மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.நரசிம்மன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.