tamilnadu

புதிய கப்பல்கள் வாங்க அமைச்சர் தலைமையில் ஆலோசனை

சென்னை,மார்ச் 9- தமிழக பொதுப்பணிகள், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் தலைமையில் மார்ச் 9 அன்று பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக அலுவலர்களுடன் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு சொந்தமான மூன்று கப்பல்கள், இயக்க போதுமான திறன் குறைந்துவிட்ட காரணத்தால் 2017-2018 ஆம் ஆண்டில் விற்பனை செய்யப்பட்டுவிட்டது.  பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்திற்கு மீண்டும் புதிய கப்பல்கள் தமிழக அரசு சார்பில் வாங்குவது குறித்து இன்றைய கலந்தாய்வுக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.   இக்கூட்டத்தில் நெடுஞ்சாலைகள் - சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் தீரஜ்குமார், பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழக தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சிவசண்முகராஜா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.