அமைச்சர் எஸ்.ரகுபதி பாராட்டு புதுக்கோட்டை, பிப்.18- வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தென் மாநிலங்களில் நூற்றுக்கும் மேற் பட்ட இடங்களை ‘இந்தியா’ கூட்டணி கைப்பற்றும் என்றார் சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதி. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் இரத்ததானக் கழக மாநில மாநாடு கடந்த சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் புதுக் கோட்டையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில் இரத்த தானத்தைத் தொடங்கி வைத்தும், மாநில முழு வதும் இருந்து பெறப்பட்ட 10 ஆயி ரம் உடல் உறுப்புதான உறுதிமொழிப் படிவங்களைப் பெற்று கொண்டும் அமைச்சர் ரகுபதி பேசியதாவது: இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் தமிழ்நாட்டிலும், இந்தியாவிலும் பல் வேறு மகத்தான பணிகளைச் செய்து வருகிறது. அதனொரு பகுதியாக இக் கட்டான நிலையில், மனித உயிர் களைக் காப்பாற்றும் இரத்த தானங் களைச் செய்து வருவது மிகவும் போற் றத்தக்கது. தானத்திலேயே சிறந்த தானம் ரத்ததானம் என்றால் அது மிகை யாகாது. அதே போல் பத்தாயிரம் உடல் உறுப்புதானப் படிவங்களை இங்கே வழங்கியிருப்பது, உங்களின் அளப்பரிய சேவைக்கு சான்றாக உள்ளது. ஒரு இயக்கம் செழித்து வளர வேண்டுமென்றால் அதில் இளைஞர் களின் செயல்பாடு முக்கியமானதாக இருக்கும். அந்த வகையில் இடதுசாரி இயக்கத்திற்கு நம்பிக்கை தரும் இயக்கமாக இந்திய ஜனநாயக வாலி பர் சங்கம் உள்ளது. திமுக-இடதுசாரிக் கூட்டணி என் பது கொள்கை அடிப்படையில் ஒன்று பட்ட இயக்கமாக செயல்பட்டு வரு கிறது. வருகிற நாடாளுமன்றத் தேர்த லில் இந்தியா கூட்டணி மகத்தான வெற்றியைப் பெறும். இந்தத் தேர்த லில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் பணி மகக்தானதாக இருக்கும். நாடு முழுவதும் ஒருங்கி ணைந்த இந்த கூட்டணி 350-க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெறும். இடி, ஐடி போன்ற மிரட்டல்களையும், தவறான புள்ளி விபரங்களையும் தாண்டி இந்தியா கூட்டணி இந்த வெற்றியைப் பெறும். திராவிட தேசம் என்று அழைக்கப் படுகிற தென்னிந்தியாவில், இந்தியா கூட்டணி 100 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும். தமிழ்நாடு மற்றும் கேரளத்தில், அனைத்துத் தொகுதிகளி லும் இந்தியா கூட்டணி வெற்றி பெற, வாலிபர் சங்கத்தினர் தேர்தல் களத்தில் சிறப்பான பங்களிப்பைச் செலுத்து வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அமைச்சர் ரகுபதி குறிப்பிட்டார்.