tamilnadu

img

தூத்துக்குடியில் சேதமான சாலைகள் சீரமைப்புக்கு நான்கு கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமனம்

தூத்துக்குடி, டிச.22- மாநில நெடுஞ்சாலைகள், மாவட்ட முக்கியச் சாலைகள், மாவட்ட இதரச் சாலைகள் போன்ற வற்றை செப்பனிட, நான்கு கண்காணிப்புப் பொறியாளர்கள் நியமிக்கப்பட்டு, பணிகள் விரைவாக நடைபெற்றுக் கொண்டிருப்பதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்தார். கனமழையினால் பாதிக்கப்பட்ட,   ஸ்ரீவை குண்டம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதி களில் உள்ள சுமார் 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகள் அரிசி, பருப்பு,  கோதுமை, பால், பிஸ்கெட், உணவு பொட்டலங்கள், குடிதண்ணீர் பாட்டில், பாய் மற்றும் போர்வை வழங்கப்பட்டு வருகிறது. பொது மக்களுக்கு நிவாரணப் பொருட்கள் வழங்கிய  பின்னர் நெடுஞ்சாலைத்துறை மற்றும்  சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ. வேலு செய்தியாளர்களிடம் மேலும் கூறிய தாவது: தூத்துக்குடி மாவட்டத்தின், கடைக்கோடியில் இருக்கும் ஸ்ரீவைகுண்டம் பகுதி மழைநீரால் சூழப்பட்டு, பல கிராமங் களுக்கு செல்லமுடியாத நிலை ஏற்பட்டது.  அர சின் சார்பாக பொதுப்பணிகள், நெடுஞ்சாலை கள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை  கூடுதல் தலைமைச் செயலாளர், சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உட்பட, மூன்று நாட்களாக தொடர்ந்து ஒவ்வொரு பகுதியாக சென்று நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். சாலைகளில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் தற்காலிகமாக சீர்செய்யப்பட்டு வருகின்றன.

குறிப்பாக ஸ்ரீவைகுண்டம்-புதுக்கோட்டை சாலை யில் மழைநீர் வடிந்துள்ளதால், ஜே.சி.பி.  இயந்திரம் மூலம் சாலைகள் சீரமைக்கப்பட்டு வரு கின்றன. ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி ஆகிய இரண்டு ஒன்றியத்திற்கும் அதிகாரி களையும் மற்றும் சாலைப் பணியாளர்களையும் நியமித்து, நிவாரண முகாம்களில் சமையல் செய்யும் இடங்களுக்கு, அரிசி, பருப்பு, காய்கறிகள், பால், பிஸ்கெட், பிரட், கோதுமை, ரவை ஆகிய நிவாரணப் பொருட்கள் இரண்டு லாரிகளில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இன்று  முதல், காலை 20 பஞ்சாயத்துகள், மாலை யில் 20 பஞ்சயாத்துகள் என்று பிரித்து, 20 அதிகாரிகள் நேரடியாக உதவ நியமிக்கப் பட்டுள்ளார்கள். இவர்கள் மூலமாக, அரிசி, பருப்பு, கோதுமை, ரவை, சர்க்கரை, பிஸ்கெட், பிரட் மற்றும் குடிதண்ணீர் பாட்டில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் அடங்கிய தொகுப் பாக தயார் செய்து, 20 லாரிகளில், 20 பஞ்சாயத்து களுக்கு வழங்கப்படும் என்று தெரிவித்தார். நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறை முகங்கள் துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் பிரதீப் யாதவ் ,நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலை மைப் பொறியாளர் இரா.சந்திரசேகர், பொதுப்பணித்துறை சிறப்பு அலுவலர் இரா.விஸ்வநாத் மற்றும் நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை தலைமைப் பொறி யாளர்கள் மற்றும் அலுவலர்களுடன் சென்று, நிவாரணப் பணிகளை செயல்படுத்துவதில் பேருதவி புரிந்தார்கள் என்றார்.