சென்னை,ஏப்.18- மழை வெள்ள பாதிப்பு நிவாரணமாக ஒன்றிய பாஜக அரசிடம் கேட்டது 1 லட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய். ஆனால், கிடைத்ததோ வெறும் 7 ஆயிரத்து 40 கோடி மட்டுமே என்று சட்டப் பேரவையில் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் குற்றம் சாட்டினார். சட்டப்பேரவையில் திங்களன்று (ஏப்.18) வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மானியக் கோரிக் கையின் கொள்கை விளக்க குறிப்பை தாக்கல் செய்து பேசிய அமைச்சர்,“பருவ மழையினால் ஏற்பட்ட சேதங்களையும் அரசு மேற்கொண்ட நிவாரணப் பணிகளையும் பட்டியலிட்டார். மேலும், முதலமைச்சர் நேரில் சென்று ஆய்வுகள் கொண்டு உடனுக்குடன் எடுத்த நடவடிக் கைகளையும் சுட்டிக்காட்டினார். தொடர்ந்து பேசிய அமைச்சர்,“மழை வெள்ளப் பாதிப்புகளில் இருந்து தமிழ் நாட்டை சீரமைக்க ஒன்றிய பாஜக அரசி டம் நிவாரணம் கேட்டு பலமுறை கடிதம் எழுதியும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார்.
திருவோணம்-வாணாபுரம் வட்டங்கள்!
பின்னர் நடந்த விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் 21 புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டார். அப்போது, தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்த நாடு மற்றும் பட்டுக் கோட்டை ஆகிய வட்டங்களை சீரமைத்து புதியதாக திரு வோணம் வருவாய் வட்டம் புதிதாக உருவாக்கப்படும். அதே போல்,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சங்காரபுரம் வட்டத்தை சீரமைத்து புதியதாக வாணாபுரம் வட்டம் உரு வாக்கப்படும்” என்றார். மாவட்டங்களில் கிராம நிர்வாக அலுவலர்களின் சேவைகள் மக்க ளுக்கு விரைந்து சென்றடைய மாவட்டங்களில் 274 கிராம நிர்வாக அலுவலர் பணியிடங்கள் நிரப்பப்படும். சிறப்பு வட்டாட்சியர்(சமூக பாதுகாப்புத் திட்டம்) பணியிடங்கள் சென்னையில் மாதவரம், கடலூரில் குறிஞ்சிப்பாடி, கரூரில் கடவூர், நாமக்கலில் கொல்லி மலை ஆகிய வட்டங்கள் புதிதாக உருவாக்கப்படும் எனவும் அறிவித்தார்.
பேரிடர் மீட்பு மையம்
நாகப்பட்டினம் மாவட்டம் நாகை நகராட்சி நம்பியார் நகர் பகுதி புயல் மற்றும் மழை வெள்ளத்தால் அதிக பாதிப்புக்குள்ளாகும் பகுதியாகும். ஒவ்வொரு ஆண்டும் வடகிழக்கு பருவ மழைக் காலங்களில் மனித உயிரிழப் புகளை பெரிய அளவில் தவிர்க்க ரூ.6 கோடி செலவில் பேரிடர் மீட்பு மையம் ஒன்று அமைத்து கொடுக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.