tamilnadu

img

சிறுகுறு நடுத்தர தொழில் கடனுக்கான தகுதி மதிப்பீட்டை அரசு வங்கிகளே செய்து கொள்ளும்

புதுதில்லி, நவ.29- சிறுகுறு நடுத்தர தொழில் கடனுக்கான தகுதி மதிப்பீட்டை அரசு வங்கிகளே செய்து கொள்ளும் என்று நாடாளுமன்றத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் எழுப்பிய கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் பதிலளித்துள்ளார். கடன் தகுதிக்கான முடிவுகளை எடுப்பதற்கான உள் மதிப்பீட்டு முறை மையை வெளி நிறுவனங்களின் உதவி  இன்றி தாமாகவே அரசு வங்கிகள் செய்து கொள்வதற்கான தொழில் நுட்ப  கட்டமைப்பு பணிகள் துவங்கியிருப்ப தாக சிறு குறு நடுத்தர தொழில்கள் ஒன்றிய இணை அமைச்சர்  தெரிவித் துள்ளார்.  2024 பட்ஜெட்டில் ஒரு சிறு நடுத்தர தொழில் கடன்களை எளிமை யாக்குவதற்கான அறிவிப்புகளை வெளியிட்ட போது இப்படியொரு கட்ட மைப்பை அரசு வங்கிகள் ஏற்படுத்திக் கொள்ளும் என்று நிதி அமைச்சர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.  இது குறித்து நாடாளுமன்றத்தில் சு. வெங்கடேசன் எம்.பி., கேள்வி (எண் 539/28.11.2024) எழுப்பியிருந்தார்.  இதற்கு பதில் அளித்த ஒன்றிய இணை அமைச்சர் சுஷ்ரி ஷோபா கரண் டால்ஜே, அரசு வங்கிகள் இதற் கான நவீன தொழில் நுட்ப மதிப்பீடு  கட்டமைப்பை உருவாக்கி வருவதாக  நிதிச் சேவைத் துறை தெரிவித்துள்ள தாக பதில் அளித்துள்ளார்.  இது குறித்து கருத்து தெரிவித்துள்ள  சு. வெங்கடேசன் எம்.பி., கடன் விண்ணப் பங்கள் வேகமாக பரிசீலிக்கப்படவும், கடன் பெறுவதில் உள்ள இழுத்தடிப்பு களும், நிராகரிப்புகளும் குறைவதற்கு  இப்புதிய ஏற்பாடு வழி வகுத்தால் மகிழ்ச்சிதான் என்று குறிப்பிட்டுள்ளார்.