சென்னை, அக். 14- தமிழ்நாடு கனிம நிறுவனத்தில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு 10 மாத நிலுவை ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வரும் நிறுவனத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னை சேப்பாக்கம் இயக்குநர் அலுவலகம் முன்பு தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கனிம நிறுவனத்தில் பணி யாற்றும் தொழிலாளர்களுக்கு கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் 2021ஆம் ஆண்டு மார்ச் வரை 10 மாத காலத்திற்கு ஊதியம் வழங்க தொழிலாளர்க ளுக்கு மாதாமாதம் ஊதியத்தை வழங்காமல் இழுத்தடிப்பு செய்து வருவது மனிதாபிமானமற்ற செயலாகும். ஊதிய பட்டுவாடா சட்டம் 1936இன்படி ஊதியம் வழங்காத நிர்வாகத்தின் மீது அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் அரசு நிர்வாகமே ஊதியம் வழங்காமல் தள்ளி போடுகிறது. மேலும், இந்த தொழிலாளர் களுக்கு அகவிலைப்படி 7 விழுக் காடு மட்டுமே வழங்கி வருகிறது. முன்பணம் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளையும் நிறுத்தி விட்டது. 2012ஆம் ஆண்டிலிருந்து 64 பேருக்கு வாரிசு வேலை வழங்க ப்படாமல் உள்ளது.
ஓய்வுபெறும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய பணப்பலன்களும் முறை யாக வழங்குவதில்லை. இந்த நிலையில் தமிழ்நாடு கனிம நிறுவன ஊழியர் சங்கம் (சிஐடியு), தமிழ்நாடு கனிம நிறுவன தேசிய தொழிலாளர் சங்கம் (ஐஎன்டியுசி) சார்பில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்திற்கு சிஐடியு பொதுச் செய லாளர் கே.விஜயன் தலைமை தாங்கினார். கருப்பசாமி, சக்கரை வேலு, மகாலிங்கம், முருகேசன், தெய்வானை, பாவாய் (சிஐடியு) டி.வி.சேவியர், மாரிமுத்து, ராஜேந் திரன் (ஐஎன்டியுசி) ஆகியோர் கோரி க்கைகளை விளக்கிப் பேசினர். இதனைத் தொடர்ந்து, சங்க நிர்வாகிகளுடன் நிர்வாக இயக்கு நர் சுதீப் ஜெயின் நடத்திய பேச்சு வார்த்தையின்போது,“ 10 மாத நிலுவை ஊதியத்தை நவம்பர் மாதம் முதல் ஒவ்வொரு மாதமும் படிப்படி யாக வழங்கப்படும், ஓய்வூதி யர்களின் பணப்பலன்கள் உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். வரும் பிப்ரவரி மாதத்துடன் கிராபைட் ஒப்பந்தம் முடிய உள்ளது, அதன்பிறகு கூடுதல் விலைக்கு ஒப்பந்த போடப்படும். தாது மணல் குவாரி பணிகள் துவங்கி தொழிலாளர்களுக்கு பணி வழங்கப்படும் என்றும் பிற கோரிக்கைகள் குறித்து பரிசீலிக் கப்படும்” என்றும் தெரிவித்தி ருக்கிறார்.