tamilnadu

img

புலம்பெயர் தொழிலாளர்களால் திருப்பூர் ரயில்நிலையத்தில் கூட்டம்

திருப்பூர், அக்.30- தீபாவளிப் பண்டிகைக்காக புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த மாநிலங்கள் செல்வதால் திருப்பூர் ரயில்நிலையத்தில் கடும் கூட்டம் ஏற்பட்டது. எர்ணாகுளத்தில் இருந்து டாடா நகர் செல்லும் ரயில், ஆழப்புழாவில் இருந்து தன்பாத் செல்லும் ரயில் ஆகியவற்றில் முண்டியடித்துக் கொண்டு ஏராளமானவர்கள் ஏறினர். சிலர் அவசர வெளியேற்ற ஜன்னல் வழியாகவும் ஏறி உள்ளே சென்றனர். கடந்த ஆண்டைவிட தற்போது 9 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டாலும், ஒரு வாரம் விடுமுறையை பின்னலாடை நிறுவனங்கள் அளித்துள்ளதால் 80% தொழிலாளர்கள் சொந்த ஊருக்குப் புறப்பட்டுச் செல்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.