tamilnadu

img

முழு ஊரடங்கால் ஏற்காடு, மேட்டூர் சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின

சேலம், ஜன.9 ஞாயிறு முழு ஊரடங்கு காரணமாக சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர், ஏற்காடு சுற்றுலா தலங்கள் வெறிச்சோடின. சேலம் மாவட்டம் ஏற்காட்டில் வார இறுதி நாளான சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்று லா பயணிகள் அதிக அளவில் வருவார்கள். சேலம் மட்டுமல்லாமல் பல்வேறு மாவட்ட ங்களில் இருந்தும், கர்நாடகா ஆந்திரா, கேரளா பல்வேறு மாநிலங்களில் இருந்தும் சுற்றுலா பயணிகள் ஏற்காட்டிற்கு படையெ டுப்பார்கள். இந்த நிலையில்கொரோனா பரவ லை கட்டுப்படுத்த வெள்ளி, சனி நாட்க ளில் இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. ஞாயிறன்று முழு ஊரடங்கும் அமல்படுத்தப்பட்டது. இதனால் ஏற்காட்டிற்கு சுற்றுலா பயணிகள் வருகை குறைந்தது. இதனால் அண்ணா பூங்கா, நீர்வீழ்ச்சி, லேடிஸ், ெஜன்ஸ் சீட், சுற்றுலா பயணிகள் இல்லா மல் வெறிச்சோடி காணப்பட்டன. ஏற்காட்டிற்கு செல்லும் வாகனங்கள் போலீசார் சோதனைக்கு பிறகே அனுமதிக் ்கப்பட்டனர். இதே போல் மேட்டூர் பூங்கா, பூலாம்பட்டி ஏரி உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் முழு ஊரடங்கு காரணமாக வெறிச்சோடி காணப்பட்டது. அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்