தஞ்சாவூர், ஏப்.28- தஞ்சை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங் களில் சிறப்பு தூர்வாரும் திட்டத்தில் பணிகள் மேற்கொள்ள நிர்வாக ஒப்புதல் வழங்கப் பட்டுள்ளது. இதன்படி பூதலூர் ஆனந்த காவிரி வாய்க்கால் 3 பிரிவாக பிரிக்கப்பட்டு பணிகள் தூர்வாரப்பட உள்ளது. இதற்கான பணிகளை அமைச்சர் துரைமுரு கன் வியாழக்கிழமை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அப்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் உடன் இருந்தனர். நிகழ்ச்சியை தொடர்ந்து அமைச்சர் துரை முருகன் செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘4,773 கிலோ மீட்டர் காவிரி டெல்டா பகுதி யில் உள்ள மாவட்டங்களில் தூர்வாரும் பணி களுக்காக ரூ.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லா வேலைகளையும் ரூ.90 கோடியில் செய்ய இயலாது. எது அத்தியாவசியமோ, முக்கியத்துவம் வாய்ந்ததோ, அந்தப் பணிகள் செயல்படுத்தப்படும். ஆனந்தக் காவிரி வாய்க்காலை தூர்வார ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. டெல்டா மாவட்டங் களில் தூர்வாரும் பணிகளுக்காக 834 மண்வா ரும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 4,773 கிலோ மீட்டர் தூரத்திற்கு தூர்வாரப்பட உள்ளது.
தூர்வாரும் பணிகளை பொதுப்பணித்துறை அதிகாரிகளுடன், தலைமை பொறியாளர், ஆட்சியர் வரை ஆய்வு செய்வார்கள். இதற்கு மேலாக மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி ஒருவர் நிய மிக்கப்பட்டு அவரும் ஆய்வு செய்வார். தூர்வா ரும் பணிகளுக்காக இந்த முறை நிதிநிலை அறிக்கையிலேயே நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதனால் தாமதமின்றி விரைவாகவே பணிகள் நடைபெறும். மேட்டூர் அணையில் தண்ணீர் இருப்பு நல்ல நிலையில் இருப்பதால் பாசனத்துக்கான தண்ணீரை குறித்த நாளில் திறக்க வாய்ப்பு உள்ளது’’ எனக் கூறினார். நிகழ்ச்சியில், தஞ்சை மாவட்ட கண்கா ணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ்ஆலிவர், தலைமை கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி. நீலமேகம், பூண்டி கலைவாணன், நிவேதா முருகன், தஞ்சை மாவட்ட ஊராட்சி தலைவர் உஷா புண்ணியமூர்த்தி, தஞ்சை மேயர் சண்.ராம நாதன், தலைமை பொறியாளர் ராமமூர்த்தி, கண்காணிப்பு பொறியாளர் முருகேசன், பூதலூர் ஒன்றியக்குழு தலைவர் அரங்கநாதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக தூர்வாரும் பணிகளை உட னுக்குடன் கண்காணிப்பதற்கு உரிய செயலி யின் செயல்முறை குறித்து கண்காணிப்பு அதிகாரி சந்தீப் சக்சேனா அமைச்சரிடம் விளக்கி கூறினார்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மனு
ஆய்வுப் பணிக்காக வந்திருந்த அமைச்சர் துரைமுருகனிடம், தமிழ்நாடு விவசாயிகள் சங்க பூதலூர் வடக்கு ஒன்றியத் தலைவர் கே.காந்தி கோரிக்கை மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில், ‘‘கச்சமங்கலம் தலைப்பி லிருந்து பிள்ளை வாய்க்கால் வரை, காவிரி பாசன வாய்க்காலில், சுமார் 15 கிலோ மீட்டர் தூரம் சிமெண்ட் தளம் அமைத்து பணி முடித்து ள்ளனர். இதில் தீட்சசமுத்திரம் ஊராட்சி பகுதியில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரம் நிறுத்தி வைக்கப்பட்டு, பணி முடியாமல் மோசமான நிலையில் உள்ளது. இப்பணியை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்பாக முடிக்க வேண்டும்’’ எனக் கூறப்பட்டுள்ளது.