காம்பஸில் வட்டம் போட
பட்ட சிரமங்கள்
அடை தோசை சுடுகையில்
அடிமனசில் வரும்
பள்ளி நாட்களில்
பழகிய கவிதைகள்
சலவை மளிகை
லிஸ்டுகளாக
உருமாறிப் போவதாய்
ஒரு உணர்வு.
பிறந்தநாள் பரிசாய்ப்
பெரியமாமா
வாட்டர் கலர் பாக்ஸ்
வாங்கித் தருகையில்
அளித்த ஆசிகள்
மார்கழி விடியலில்
மனசில் ஒலிக்கும்
குடும்பச் சண்டைகளில்
பலகீனமாய் ஒலிக்கும்
என் குரல்
பேச்சுப் போட்டிகளில்
பெற்ற கோப்பைகளில்
மோதிச் சிதைந்து போகும்.
ஸ்போர்ட்ஸ் சைக்கிள் கேட்டு
அப்பாவிடம் அழுத அழுகை
கணவரின் நச்சரிப்பில்
ஸ்கூட்டர் கேட்டுக்
கடிதம் எழுதுகையில்
நினைவுக்கு வருகிறது.
-ஜீவி