tamilnadu

img

கல்வி வியாபார எதிர்ப்பு இலக்கில் தொடர்ந்து பயணிப்போம்! - க.நிருபன் சக்கரவர்த்தி

“சமூக அவலங்களை எதிர்த்து பொதுவாழ்வில் உரிமைக்காக போராடும் எங்களை பொருளை வாங்க -விற்க வந்த நுகர்வு கலாச்சார பார்வை யில் பார்க்கக் கூடாது. பணக்காரர்களுக்கு ஒரு நீதி, ஏழைக்கு ஒரு நீதி. சிலியின் சமத்துவமின்மையால் ஏழைகள் பாதிக்கப்படுவதை இனியும் அனுமதிக்க.”  38 ஆண்டுகளுக்கு பிறகு சிலியில்  மீண்டும் இடதுசாரி அரசை உருவாக்க வுள்ள கேப்ரியல் போரிக் மாணவ தலைவ ராக இருக்கும்போது எழுப்பிய முழக்கங் கள் தான் இவை. கடந்த பத்தாண்டுகளில் உலகம் முழு வதும் ஏற்பட்ட நிதி மூலதனத்தின் கடுமை யான நெருக்கடி உலக அரசியலை கடும் வலதுசாரி திருப்பத்தை நோக்கி கொண்டு சென்றது. டொனால்டு டிரம்ப், போரிஸ் ஜான்சன், போல்சானரோ, நரேந்திர மோடி போன்ற அதிதீவிர வலதுசாரி எண்ணம் கொண்ட அரசியல் தலைவர்கள் முன்னு க்கு வந்தனர். 

அதேசமயம் நவதாராளமய கொள்கையை எதிர்த்து, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, கொரோனா காலத்தில் முதலாளித்துவ சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வியை எதிர்த்து சமூக உரிமைகளுக்காக உலக மக்கள்  நடத்திய போராட்டங்கள் உலக அர சியலை ஆட்டம் காணச் செய்தது. சோச லிச அரசுகளின் பொதுமக்கள் நலன்சா ர்ந்த அரச கட்டமைப்புக்கும், முதலாளித்து வத்திற்கும் இடையிலான முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது.  அரசியலில் உள்ள யாவரும் மக்கள் நலனை, ஜனநாயகத்தை, சோசலிசத்தை பேசவேண்டிய நிலைமைக்கு அரசியல் நகர்ந்துள்ளது. இந்த கடும் நெருக்கடி முதலாளித்துவ நாடுகளின் இயலா மைக்கு  சோசலிசமே மாற்று எனும் நிலை முன்னுக்கு வந்துள்ளது.

அதேசமயம் நவதாராளமய கொள்கையை எதிர்த்து, கடும் உழைப்புச் சுரண்டலுக்கு எதிராக, கொரோனா காலத்தில் முதலாளித்துவ சுகாதாரக் கட்டமைப்பின் தோல்வியை எதிர்த்து சமூக உரிமைகளுக்காக உலக மக்கள்  நடத்திய போராட்டங்கள் உலக அர சியலை ஆட்டம் காணச் செய்தது. சோச லிச அரசுகளின் பொதுமக்கள் நலன்சா ர்ந்த அரச கட்டமைப்புக்கும், முதலாளித்து வத்திற்கும் இடையிலான முரண்பாடு தெளிவாக வெளிப்பட்டது.  அரசியலில் உள்ள யாவரும் மக்கள் நலனை, ஜனநாயகத்தை, சோசலிசத்தை பேசவேண்டிய நிலைமைக்கு அரசியல் நகர்ந்துள்ளது. இந்த கடும் நெருக்கடி முதலாளித்துவ நாடுகளின் இயலா மைக்கு  சோசலிசமே மாற்று எனும் நிலை முன்னுக்கு வந்துள்ளது.

தமிழகத்தில் இதுவரை இல்லாத வகையில் கடந்த ஐந்தாண்டுகளில் ஐந்தா யிரத்துக்கும் மேற்பட்ட வழக்குகள் மாண வர்கள் மீது மட்டும் போடப்பட்டுள்ளன. இதில் மாணவர் சங்க தலைவர்கள் ஒவ்வொருவர் மீதும் குறைந்தது இருபது வழக்குகள் புனையப்பட்டுள்ளன. திமுக  தலைமையிலான முற்போக்கு ஜன நாயக கூட்டணி வெற்றிபெற மாணவர் போராட்டம் மிக முக்கியமான காரண மாகும். எனினும் மாணவர்கள் மீதான பொய் வழக்குகள் தொடர்ந்த வண்ணமே உள்ளன. சமீபத்தில் கோவையில் வேளாண் பல்கலைக்கழக குளறுபடிக்கு எதிராகப் போராடிய மாணவர்களை இரவு முழுவதும் சிறையில் அடைத்து வைத்து காலையில் மாஜிஸ்டிரேட் உத்தரவால் வெளிவிடப்பட்டனர்.

இதில் ஒரு மாணவி உள்பட கைது செய்யப்பட்டு வழக்கு புனையப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன் ஒரகடம் ஃபாக்ஸ்கான் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களோடு பங்கெடுத்த மாணவர் சங்க தலைவர்களையும் கைது செய்து நான்கு  நாட்கள் சிறையில் வைத்திருந்தது. ஆட்சியாளர்கள் மாறியுள்ள நிலையில் அரசு இயந்திரம் மக்களுக்கானதாக மாற்றப்பட வேண்டும். பாண்டிச்சேரி மத்தியப் பல்கலைக் கழகத்தில் கட்டண உயர்வுக்கு எதிராகப் போராடிய மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஐஐடிகளில் தொட ரும் சமூகநீதிக்கு எதிரான நடவடிக்கை கள், பல்கலைக்கழகம் உள்ளிட்ட கல்வித் துறையில் இந்துத்துவா தலையீடு குறைந்தபாடில்லை. நீட் தேர்வு விலக்கு வரைவை இன்று வரை குடியரசுத் தலை வருக்கு அனுப்பாமல் ஆளுநர் இழுத்த டித்து வருகிறார். மாநில முதல்வர் ஒரு சில சந்திப்புகள் நடத்தியும் நடவடிக்கை யில்லை. பள்ளிகல்வி அமைச்சர் தேசியக்கல்வி கொள்கையில் நல்ல அம்சத்தை நடைமுறைப்படுத்துவது குறித்து யோசிப்போம் என்கிறார். ஒன்றிய  பாஜக அரசின் காவிகார்ப்பரேட் கொள்கை யை எதிர்ப்பதில், சமூக, அரசியல், பொரு ளாதார கட்டமைப்பில் சமரசம் செய்து கொண்டு எதிர்க்க முடியாது. மக்களோடு, மாணவர்களோடு வீதியில் இறங்கி போராட வேண்டும். ஒன்றிய அரசின் மக்கள் விரோத சட்டங்களை அமல்படுத்த மறுக்க வேண்டும். 

மாணவர்கள் தற்கொலை, பாலியல்  சீண்டல் போன்ற கல்விச் சூழலில் ஏற் பட்டுள்ள அவலங்களை மாற்றியமைத்திட பொதுக்கல்வியை பலப்படுத்த வேண்டும். ஆசிரியர்கள் தங்கள் பணியை சமூக அரசியல் பணியாக உணர வேண்டும். திமுக அரசால் கடந்த 2007 ஆம் ஆண்டு நிறுத்தப்பட்ட மாணவர் பேரவை தேர்தல்களை மீண்டும் நடத்த வேண்டும். ஆரம்பக் கல்விமுதல் ஆராய்ச்சி கல்வி வரை அரசே வழங்க வேண்டும். கல்வி மட்டுமின்றி சுகாதாரம், போக்குவரத்து, விவசாயம், கனிமவளங்கள், தொழிற் சாலை மற்றும் தொழில் வளர்ச்சியும் பொதுக்கட்டமைப்போடு இணைக்கப்பட வேண்டும். தேசம்முழுமைக்கும் ஒன்றிய  அரசு எதிர்ப்பில் தமிழகம் முன்னிற்க மாணவர் போராட்டம் மிக முக்கியமானது. தேசியக்கல்வி கொள்கையை எதிர்த்து,  நீட் தேர்வை எதிர்த்து தொடர் போராட்டங் களை முன்னெடுப்போம். 280க்கும் மேற்பட்ட மாணவர் தியாகிகளை நெஞ்சில் ஏந்தி சுதந்திரம், ஜனநாயகம், சோசலிசம் என்ற இலக்கை நோக்கி தொடர்ந்து பயணிப்போம்.