tamilnadu

img

இது மோடி தொகுதியின் ஸ்டைல்

லக்னோ பாஜகவின் விதவிதமான மோசடி களுக்கு பெயர் போன உத்தரப் பிரதேச மாநிலத்தில் பிரதமர் மோடியின் சொந்த  தொகுதியான வாரணாசிக்கு உட்பட்டது ரமணா கிராம பஞ்சாயத்து.  இந்த பஞ்சாயத்தின் மல்ஹியா பகுதியில் அங்கன்வாடி ஊழியர் சுமன்லதா என்பவர் ஆதார் அட்டைகளை - வாக்காளர்  அடையாள அட்டையுடன் இணைப்பதாக கூறி கிராமத்தினரிடம் விபரங்களை சேகரித்துள் ளார். அதன்பிறகு  ஒன்றிய அரசின் “போஷன் 2.0 அபியான் யோஜனா” திட்டத்தின் கீழ் சலுகை வழங்கப்படும் என  அறிவித்து பணம் பறித்துள்ளார். மேலும் சேகரித்த விபரங்கள் மூலம் அங்கன்வாடி மையத்தில் 40 சிறுமிகளின் விபரங்களை கொடுத்தும், அவர்கள் கருவுற்று இருப்பதாகக் கூறியும் சலுகையை பெற்றதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  இந்நிலையில், போஷன் அபியான் யோஜனா திட்டத்தின் கீழ் அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் குறித்து குழந்தை கள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் இருந்து 40 சிறுமிகளின் வீட்டிற்கு தகவல் சென்றுள்ளது. அதன்பிறகு தான் சுமன்லதாவின் மோசடிகள் அனைத்தும் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து சிறுமியின் குடும்பத்தினர் பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரி வித்தனர். உத்தரப்பிரதேச மாநில தலைமை வளர்ச்சி அதிகாரி ஹிமான்ஷு நாக்பால் விசார ணைக்கு உத்தரவிட்டுள்ளார். பெற்றோர்கள் கண்ணீர் கருவுற்று இருப்பதாக கூறப்பட்டு “போஷன் 2.0 அபியான் யோஜனா” திட்டத்தில் பதிவு செய்யப்பட்ட 40 சிறுமிகளும் பள்ளி மாணவிகள் ஆவர்.  தற்போது மோசடி சம்பவம் வெளியே கசிந்ததும் 40 சிறுமிகளை இழிவுபடுத்தும் விதமாக ரமணா கிராம பஞ்சாயத்து முழுவதும் செய்திகள் வெளியாகியுள்ளன. இதனால் 40 சிறுமிகளின் பெற்றோர்கள் கண்ணீருடன் கவலையும் வேதனையும் கொண்டுள்ளனர்.